Latest Updates
-
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம்
கீமா பக்கோடா: ரம்ஜான் ரெசிபி
இஸ்லாமியர்கள் பெரும்பாலும் மட்டனைத் தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இந்த ரமலான் நோன்பு முடியும் தருவாயான இரவில் மட்டன் கீமாவைக் கொண்டு பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இந்த மட்டன் கீமா பக்கோடா செய்வது மிகவும் ஈஸி மட்டுமின்றி, சுவையானதும் கூட.
இங்கு அந்த மட்டன் கீமா பக்கோடா ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
மட்டன் கீமா - 2 கப் (500 கிராம்)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
கடலை மாவு - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கபாப் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கீமா, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி, பின் உப்பு, கபாப் மசாலா மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு அத்துடன் கடலை மாவு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி சரியான பக்கோடா பதத்திற்கு பிரட்டிக் கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள கலவையை சிறிது சிறிதாக எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
கீமா பக்கோடா ரெடி!!!



Click it and Unblock the Notifications