தினமும் இந்த கீரையை இப்படி சாறு வைச்சு குடிங்க... உடல் எடை புயல் வேகத்துல குறையும்...!

Posted By:

Murungai Keerai Saaru Recipe in Tamil: முருங்கை கீரையில் இரும்பு சத்து மற்றும் பிற சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் அதன் கசப்பு சுவையை குழந்தைகள் மட்டுமில்லாது பெரியவர்களும் வெறுக்கிறார்கள்.

அதன் கசப்பு சுவையை குறைத்து அவர்களை சாப்பிட செய்வதோடு, வயிறு மற்றும் வாய் பகுதில் ஏற்படும் புண்ணிற்கு அருமருந்தாக செயல்படும் இதை முயற்சி செய்யுங்கள். சரி வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.

Murungai Keerai Saaru Recipe How to Make Murungai Keerai Saaru

தேவையான பொருட்கள்:

- முருங்கைக் கீரை - 2 கப்
- பாசி பருப்பு - ½ கப்
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
- பூண்டு - 5 பல்
- கருவேப்பிலை - கொத்து
- தேங்காய் - ¼ மூடி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

- முதலில் பாசிப்பருப்பை இரண்டு முறை நன்றாக கழுவி 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.

- வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

- உங்கள் விருப்பப்படி தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.

- அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சோம்பு சேர்த்து அரைத்து எடுத்து வைக்கவும்.

- முருங்கை கீரையை உருவி குச்சிகள் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும்.

- முருங்கை கீரையில் படிந்திருக்கும் மண், தூசுகளை நீக்க பத்து நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.

- பின் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும் கீரையை கழுவி கைகளால் தனியே எடுத்து வைக்கவும்.

- கீரை வகைகளை தண்ணீரில் கழுவி வடித்தால், அதில் இருக்கும் மண், தூசிகள் தண்ணீரின் அடி பகுதியில் தங்கியிருக்கும்.

- நன்கு பழுத்த சிவப்பு தக்காளியை தண்ணீரில் கழுவி காம்பு பகுதியை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

- பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

- பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காயவிடவும்.

- அதில் கருவேப்பில்லை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

- பின் பூண்டு, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

- அதனுடன் தக்காளி சேர்த்து வேக விட்டு, மஞ்சள்தூள் மற்றும் ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்த்து வதக்கவும்.

- பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

- பருப்பு அரைப்பதம் வெந்ததும் கழுவி சுத்தம் செய்து வைத்த முருங்கை கீரையை சேர்த்து நன்றாக வேக விடவும்.

- கடைசியாக அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான முருங்கை கீரை தண்ணி சாறு ரெடி!

[ of 5 - Users]
Story first published: Wednesday, July 30, 2025, 21:07 [IST]
Desktop Bottom Promotion