Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.. சத்தான... பாசிப்பருப்பு சூப் செய்வது எப்படி?
இன்று சூப் ஏதாவது செய்து குடிக்க விரும்புகிறீர்களா? என்ன சூப் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பாசிப்பருப்பு உள்ளதா? அப்படியானால் அந்த பாசிப்பருப்பைக் கொண்டு ஒரு சுவையான மற்றும் சத்தான சூப் செய்து குடியுங்கள்.
மாலை வேளையில் தினமும் காபி, டீயை குடிப்பதற்கு பதிலாக, அவ்வப்போது சூப் தயாரித்து குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் அல்லவா? நீங்கள் இன்று சூப் ஏதாவது செய்து குடிக்க விரும்புகிறீர்களா? என்ன சூப் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பாசிப்பருப்பு உள்ளதா? அப்படியானால் அந்த பாசிப்பருப்பைக் கொண்டு ஒரு சுவையான மற்றும் சத்தான சூப் செய்து குடியுங்கள். இந்த சூப் செய்வதற்கு சமையலறையில் உள்ள ஓரிரு பொருட்களே போதுமானது. முக்கியமாக இந்த சூப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு பாசிப்பருப்பு சூப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* சிறிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு
தாளிப்பதற்கு..
* கிராம்பு - 1
* பட்டை - 1/4 இன்ச்
* பூண்டு - 3 பல்
* சிறிய அளவிலான வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் பாசிப்பருப்பைக் கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கேரட், தக்காளி சேர்த்து, நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்துள்ள பாசிப் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 3 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். பின் அதில் உள்ள பட்டை மற்றும் கிராம்பை நீக்க வேண்டும்.
* அடுத்து குக்கரில் உள்ள அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் சுவைக்கேற்ப மிளகுத் தூள் சேர்த்து கிளற வேண்டும். ஒருவேளை சூப் மிகவும் கெட்டியாக இருந்தால், நீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.
* இறுதியாக சூப்பை ஒரு பௌலில் ஊற்றி பரிமாறும் போது, மேலே சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி பரிமாற வேண்டும். இப்போது சுவையான பாசிப்பருப்பு சூப் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications










