Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
கீரையும், கடலைப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி மலபார் கீரை கூட்டு செய்யுங்க... ஆரோக்கியமான சைடிஷா இருக்கும்...!
Malabar Keerai Kootu Recipe in Tamil: ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆரோக்கிய வாழ்க்கைக்கான தொடக்கமே நமது உணவில் இருந்துதான் தொடங்குகிறது. நம் உணவுகளில் ஆரோக்கியமான பொருட்களை சேர்த்துக் கொண்டால்தான் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும்.
ஆரோக்கியமான உணவுகள் என்று வரும்போது எப்போதும் அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கீரை வகைகள்தான். ஒவ்வொரு கீரையும் ஒரு குறிப்பிட்ட சத்துக்களை வழங்குகிறது. பொதுவாக கீரையை பொரியல் அல்லது சூப் செய்துதான் சாப்பிடுவோம். ஆனால் கீரையை கூட்டு செய்தால் சாதத்தில் ஊற்றியே சாப்பிடலாம்.

மதிய வேளையில் உங்களால் தினமும் சாம்பார், ரசம், புளிக்குழம்பு என்று செய்ய பிடிக்கவில்லையா? ஆம் எனில் கீரையை மலபார் ஸ்டைலில் கூட்டு செய்து சாதத்தில் ஊற்றி சாப்பிடுங்கள். இது சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த பதிவில் சுவையான மலபார் கீரை கூட்டை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- கீரை - 4 கட்டு
- பாசிப்பருப்பு - 1/4 கப்
- கடலை பருப்பு - 1/4 கப்
- ராஜ்மா - 1/4 கப்
- நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
- பச்சை மிளகாய் - 4
- காய்ந்த மிளகாய் - 4
- கடுகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- பூண்டு - 5 பல்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- மஞ்சள் துாள் - 1/2 டீஸ்பூன்
- நறுக்கிய தக்காளி - 1 கப்
- மிளகாய் துாள் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் கடலைப் பருப்பையும், பாசிப் பருப்பையும் குக்கரில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, மூன்று விசில் வேக வைக்கவும். ராஜ்மாவை தனியாக வேக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம், இடித்த பூண்டு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி குலையும் அளவிற்க்கு வதங்கியதும் பச்சை மிளகாய், மிளகாய் துாள் சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் நறுக்கி வைத்த கீரையை சேர்த்து வதக்கவும். கே
- கீரை பாதியளவு வெந்ததும் அதில் வேக வைத்த ராஜ்மா, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு கலவையை சேர்த்து, உப்பு, தேவையான நீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- கலவை நன்கு கெட்டியானதும், சூடாக பரிமாறவும். இது சாதம் மட்டுமின்றி சப்பாத்தி, பூரி மற்றும் தோசை போன்ற டிபன் வகைகளுக்கும் சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











