Latest Updates
-
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க? -
இந்த 4 விஷயங்களை பின்பற்றாதவரின் குடும்பம் விரைவில் வறுமையில் சிக்குமாம் - சாணக்கிய ரகசியம் -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்.. கொங்குநாடு உருளை குருமா
Kongunadu Urulai Kurma: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா?
அப்படியானால் அதைக் கொண்டு கொங்குநாடு உருளை குருமாவை செய்யுங்கள். இந்த உருளை குருமா சப்பாத்தி, தோசைக்கு மட்டுமின்றி, பூரி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். உங்களுக்கு கொங்குநாடு உருளை குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே கொங்குநாடு உருளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டது)
* தக்காளி விழுது - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
* பூண்டு - 3 பல் (துருவியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய்/நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
வறுத்து அரைப்பதற்கு...
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1 இன்ச்
* பிரியாணி இலை - 1
* துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து
அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து ட்ரை ரோஸ்ட்
செய்து தனியாக எடுத்து குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/நெய்
சேர்த்து சூடானதும், இஞ்சி, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி, நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளி விழுது, மஞ்சள் தூள், அரைத்த மசாலாவை சேர்த்து
கிளறி, பின் வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்கை
சேர்த்து கிளறி, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, குறைவான
தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து
கிளறி இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கொங்குநாடு
உருளை மசாலா தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications