Latest Updates
-
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு அசைவ சுவையில் சூப்பர் சைடு டிஷ் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் ரொம்ப ஈகோ பிடித்தவர்களாக இருப்பார்களாம்... நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா? -
ரத்னா கபே பேமஸ் சாம்பார் ரெசிபி...இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க..எல்லோரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க! -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு 30 வயதிற்கு மேல் சனி பகவானின் ஆசியால் வெற்றியும், பணமும் குவியும்.. -
அமெரிக்கா எங்கேயோ குண்டு போடுறது இங்க காரின் விலையை உயர்த்துமா? பெட்ரோலையும் பேரலில் புடிச்சு வைக்கனும் போல! -
120 ஆண்டுக்கு பின் உருவாகும் மீனத்தில் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுதாம்! -
வெந்தயக்கீரையை வாங்குனா.. இப்படி புளிக்குழம்பு செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஒவ்வொரு இந்தியரும் கூகுள் மேப்ஸில் இந்த புதிய வசதியை தெரிஞ்சுக்கணும்.. இனி சிரமம் இருக்காது.. ஏன்? | Google Maps to Show Official Aadhaar Centres -
முகாலயர்கள் காலத்தில் ஹோலி பண்டிகை எப்படி கொண்டாடப்பட்டது தெரியுமா? எந்தெந்த அரசர்கள் ஹோலி கொண்டாடினார்கள்? -
சிம்ம ராசியில் நிகழும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்: 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
கார்த்திகை தீபத்துக்கு சாப்ட்டான பொரி அரிசி உருண்டை செய்யுங்க.. டக்கரா இருக்கும்..
Karthigai Deepam Special Pori Arisi Urundai: இந்த ஆண்டின் கார்த்திகை தீபத் திருவிழாவானது டிசம்பர் 03 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் வீடு முழுவதும் தீபங்களால் அலங்கரித்து, பூஜைக்கு பலகாரங்களை செய்து படைத்து மக்கள் வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு கார்த்திகை தீப நாளில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான ஸ்வீட் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
அப்படியானால் 1 கப் புழுங்கல் அரிசி இருந்தால், அதைக் கொண்டு பொரி அரிசி உருண்டையை செய்யுங்கள். இந்த உருண்டை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது பஞ்சு போன்று மென்மையாக இருப்பதால், குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கார்த்திகை தீபத்தன்று பொரி அரிசி உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி அரிசி உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புழுங்கல் அரிசி - 1 கப்
* ஏலக்காய் - 2
* தண்ணீர் - 2 1/4 கப்
* பொடித்த வெல்லம் - 1 கப்
* உப்பு - 2 சிட்டிகை
* தேங்காய் - 1 பெரிய மூடி (துருவியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் புழுங்கல்
அரிசியை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த அரிசியுடன், 2 ஏலக்காயை சேர்த்து, ரவா
பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 1/4 கப் நீரை
ஊற்றி, அத்துடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து, 2 சிட்டிகை உப்பை
சேர்த்து வெல்லத்தை கரைய வைக்க வேண்டும்.
* வெல்லம் நன்கு கரைந்ததும், அதில் சிறிது துருவிய தேங்காயை சேர்த்து
கிளறி, பின் அரைத்து வைத்துள்ள அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து
கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* நீர் வற்றி மாவு சற்று கெட்டியானதும், அதை இறக்கி, வெதுவெதுப்பான
நிலைக்கு வரும் வரை குளிர வைக்க வேண்டும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
உருட்டி, பின் துருவிய தேங்காயின் மேல் பிரட்டினால், சுவையான பொரி
அரிசி உருண்டை தயார்.



Click it and Unblock the Notifications








