Latest Updates
-
கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் அம்மிணி கொழுக்கட்டை ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
வயிற்றை சுத்தம் செய்யணுமா? அப்ப காலையில் எழுந்ததும் இந்த பானங்களை குடிங்க... -
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்
தினமும் வெறும் டீ போடாம.. ஒருடைம் இந்த கற்பூரவள்ளி மசாலா டீ போட்டு குடிங்க.. இதமா இருக்கும்...
Karpooravalli Masala Tea Recipe In Tamil: தற்போது ஆங்காங்கே மழை பெய்து, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இதனால் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவற்றால் நிறைய பேர் அவதிப்படுவதுண்டு. இந்நிலையில் நன்கு சூடாகவும், தொண்டைக்கு இதமாகவும் இருக்கும் வகையில் ஒரு மசாலா டீ குடித்தால் நன்றாக இருக்கும்.
பொதுவாக மசாலா டீ என்றால் ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றை மட்டும் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் சளி, இருமலில் இருந்து விடுவிக்க உதவும் கற்பூரவள்ளி கொண்டும் டீ போடலாம் என்பது தெரியுமா? ஆம், இந்த இலைகளைக் கொண்டு போடப்படும் டீ மிகவும் சுவையாக இருப்பதோடு, இதமாகவும் இருக்கும்.

உங்களுக்கு கற்பூரவள்ளி மசாலா டீயை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கற்பூரவள்ளி மசாலா டீ ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கற்பூரவள்ளி இலைகள் - 8
* ஏலக்காய் - 2
* மிளகு - 10
* இஞ்சி - 2 துண்டு
* பால் - 1 டம்ளர்
* தண்ணீர் - 1 1/2 டம்ளர்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* டீத்தூள் - 2 டீஸ்பூன்
* சர்க்கரை - 4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கற்பூரவள்ளி இலைகளை நீரில் நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் இடிக்கும் உரலில் ஏலக்காய், மிளகு சேர்த்து நன்கு
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சியை சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி, அதில் 1 1/2
டம்ளர் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கற்பூரவள்ளி இலைகளை பிய்த்து போட வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் அதில் டீத்தூளை சேர்த்து, தட்டி வைத்துள்ள மசாலா பொருட்களை
சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* டீ நன்கு பொங்கி வந்த பின், மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் டீயை
கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் நன்கு கொதித்த பின், மீண்டும் தீயை அதிகரித்து ஒருமுறை
பொங்கி வந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கி வடிகட்டினால்,
சுவையான கற்பூரவள்ளி மசாலா டீ தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications