Latest Updates
-
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் வைக்கும் திசை தெரியுமா? இந்த வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்! -
சாணக்கிய நீதி படி இந்த 4 வகை பெண்கள் ஆண்கள் வாழவும் விடமாட்டார்கள், சாகவும் விடமாட்டார்களாம் - ஜாக்கிரதை -
மதுரை மட்டன் பொடிமாஸ் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 31 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு அலைச்சல் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (31 May 2026-06 June 2026)- ஜூன் மாதத்தின் முதல் வாரம் இந்த 5 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
புகைப்பிடிக்காதவர்களிடம் அதிகரிக்கும் வாய்ப்புற்றுநோய்: காரணங்களும், அபாய அறிகுறிகளும் - விளக்கும் டாக்டர்! -
பஞ்சாப் வீடியோவை பார்த்து அதிர்ச்சியா? உங்கள் குடும்பத்திலும் இப்படி நடக்க வாய்ப்பிருக்கா? இதோ சில எச்சரிக்கை அறிகுறிகள்! -
உங்கள் துணை புகைப்பிடிப்பதை நிறுத்த மாட்டேங்கிறாரா? சண்டையிடாமல் அவர்களை மாற்ற இந்த ஒரு வழி போதும்! -
வெயிலால் டல்லாக இருக்கும் முகத்தை பளிச்சுன்னு மாத்தணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை போடுங்க... -
Guru Peyarchi 2026: 12 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் குரு பெயர்ச்சி - திடீர் லக் , ஹம்ச யோகம் யாருக்கு தெரியுமா?
5 தக்காளியும், 3 வரமிளகாயும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
Tomato Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசை தான் செய்வீர்களா? அதற்கு எப்போதும் ஒரே சுவையில் தான் சட்னியை செய்விர்களா? சற்று வித்தியாசமான சைடு டிஷ் சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெங்காயம், தேங்காய் என்று எதுவும் இல்லையா?
வெறும் தக்காளியும், வரமிளகாயும் தான் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம். இந்த கார சட்னியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த கார சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இப்படிப்பட்ட சட்னியை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசர நேரத்தில் கைக்கொடுக்கும்.

இந்த தக்காளி கார சட்னி குறித்து குக்கிங்வேர்ல்டு29 என்னும் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 5
* வரமிளகாய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் 5 தக்காளி, 3
வரமிளகாயை சேர்த்து 5 நிமிடம் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் வேக வைத்த தக்காளி மற்றும் வரமிளகாயை மிக்சர் ஜாரில் சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள், கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறி,
மிளகாய் தூள் சேர்த்து கலந்து, 5 நிமிடம் பச்சை வாசனை போய் எண்ணெய்
பிரிந்து வரும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கார
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications