Latest Updates
-
சேமியா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இன்று முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வீட்டுல காய்கறி எதுவும் இல்லையா? மீல் மேக்கர் வெச்சு இந்த வெள்ளை சால்னா செய்யுங்க.. அள்ளும்.. -
வெயிலால் கருப்பாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது... -
பீட்ரூட்டை இந்த ஸ்டைலில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
Aani Amavasya 2026: ஆனி அமாவாசையான இன்று இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த கஞ்சியை வாரம் 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடையும் குறையும், சுகருக்கும் நல்லது..
இந்த அறிகுறிகளில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் நீங்க பணக்கஷ்டத்தில் சிக்க போறீங்களாம் - சாணக்கிய தந்திரம்
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவரான சாணக்கியரின் இராஜதந்திரம் சாமானியராக இருந்த சந்திர குப்தரை, மௌரிய பேரரசின் சக்கரவர்த்தியாக மாற்றியது. சாணக்கியரின் கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருந்துபவை, ஏனெனில் இன்றும் சாணக்கியரின் அறிவுரைகள் பிரபலமானவையாகவும், பலரால் பின்பற்றப்படுவதாகவும் உள்ளது. இந்த கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் சாதாரண ஒருவர் கூட சக்கரவர்த்தியாக வாழ முடியும்.

ஆச்சார்ய சாணக்கியரின் 'சாணக்கிய நீதி' என்பது காலத்தை வென்று நிலைத்து நிற்கும் வாழ்க்கை நெறிகளின் தொகுப்பாகும். அவருடைய போதனைகள் இன்றும் பொருத்தமானவையாகவும் நடைமுறைக்கு ஏற்றவையாகவும் உள்ளன.
சாணக்கியரின் போதனைகளில் மிக முக்கியமான ஒன்று, நம் வாழ்வில் ஏற்படக்கூடிய சிக்கல்களின், குறிப்பாக நிதி நெருக்கடிகளின், அறிகுறிகளை முன்கூட்டியே உணர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகும். ஒரு குடும்பத்தில் வரவிருக்கும் நிதி நெருக்கடியை உணர்த்தும் சில அறிகுறிகளை சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
துளசிச்செடி காய்ந்து போவது
இந்து மதத்தில், துளசிச் செடி ஒரு புனிதமான செடியாகக் கருதப்படுகிறது, பெரும்பாலான மக்களின் வீடுகளில் துளசி ஒரு தெய்வமாகவே வழிபடப்படுகிறது. நீங்கள் முறையாக பராமரித்தும் வீட்டில் உள்ள துளசிச் செடி காய்ந்து போகத் தொடங்கினால், அது வரவிருக்கும் பணக்கஷ்டத்தின் அறிகுறி என்று சாணக்கியர் கூறியுள்ளார். இருப்பினும், சில சமயங்களில் போதிய நீரின்மை அல்லது குளிர்ந்த வானிலை போன்ற காரணங்களாலும் இச்செடி காய்ந்து போகக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற எந்த சூழலும் இல்லாதபோதும் துளசிச் செடி காய்ந்தால் அது வரவிருக்கும் ஆபத்தின் அறிகுறியாகும்.
வீட்டில் தொடர்ச்சியான பிரச்சினைகள்
எந்தவித வெளிப்படையான காரணமும் இன்றி உங்கள் வீட்டில் தொடர்ந்து இடையூறுகளும், பிரச்சினைகளும் ஏற்பட்டால், அது வரவிருக்கும் நிதி நெருக்கடிக்கான அறிகுறியாக இருக்கலாம். கிரக தோஷம் அல்லது வாஸ்து தோஷம் போன்ற பிரச்சனைகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சாணக்கியர் கருதினார்.
கண்ணாடி பொருட்கள் தொடர்ச்சியாக உடைவது
கண்ணாடி பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள் மட்டுமல்ல, அவை ஐஸ்வரியத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, வீட்டில் அடிக்கடி கண்ணாடிகள் உடைவது வரவிருக்கும் பண இழப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும், இது வீட்டிற்குள் வறுமை நுழைவதையும் குறிப்பதாக சாணக்கியர் கூறுகிறார்.
வீட்டில் தெய்வ வழிபாடு இல்லாமல் இருப்பது
சாணக்கிய நீதியின் படி, தெய்வ வழிபாடு இல்லாத வீட்டில் மகிழ்ச்சியோ அல்லது செழிப்போ இருக்காது. பல்வேறு சூழ்நிலைகளால் உங்கள் வீட்டில் கடவுளை வழிபடாத சூழல் நிலவுவது என்பது வரவிருக்கும் பொருளாதாரச் சிக்கல்களின் அறிகுறி என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
பெரியோர்களை அவமதிப்பது
வயதில் மூத்தவர்களை மதிப்பது இந்தியப் பண்பாட்டின் அடிப்படை அம்சமாகும். பெரியோரை அவமதிப்பது வரவிருக்கும் பொருளாதார நெருக்கடியின் அறிகுறி என்று சாணக்கியர் கருதினார். பெரியோரிடம் மரியாதையின்றி நடந்துகொள்பவர்கள் வாழ்வில் ஒருபோதும் உண்மையான மகிழ்ச்சியும், முன்னேற்றத்தையும் அடைய முடியாது என்று அவர் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications