Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
1/4 கப் கடலைப்பருப்பு இருந்தா இந்த ஈஸியான சட்னியை செய்யுங்க... இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்...!
Kadalai Paruppu Chutney Recipe in Tamil: தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு உணவு எப்போதும் இட்லி அல்லது தோசையாகத்தான் இருக்கும். இட்லி, தோசைக்கு எளிதில் செய்யக்கூடிய சரியான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னிதான். இட்லி, தோசையின் சுவையை அதிகமாக்குவதே அதனுடன் பரிமாறப்படும் சட்னிதான். எனவே அந்த சட்னி சுவையானதாக இருக்க வேண்டியது அவசியம்.
பொதுவாக இட்லி, தோசைக்கு அரைக்கப்படும் சட்னிகளில் வெங்காயம் மற்றும் பூண்டு பிரதான பொருட்களாக இருக்கும். ஆனால் இந்த இரண்டு பொருட்களும் இல்லாமலேயே இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னியை செய்யலாம். வெங்காயமும், பூண்டும் இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த கடலைப்பருப்பு சட்னியானது மிகவும் எளிதாக செய்யக்கூடிய சுவையான சட்னியாகும்.

உங்களுக்கு கடலைப்பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப்பருப்பு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1/4 கப் கடலைப்பருப்பு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 4 வர மிளகாய்
- 1/2 கப் தேங்காய் துருவல்
- சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுந்து
- சிறிதளவு கறிவேப்பிலை
- 1 வர மிளகாய்
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் ¼ கப் கடலைப் பருப்பை போட்டு வறுக்கவும்.
- பருப்பு பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
- பின்னர் 1 கொத்து கறிவேப்பிலை மற்றும் 4 வர மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- கறிவேப்பிலை மொறுமொறுப்பாக மாறும் வரை தொடர்ந்து வறுக்கவும்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஆற வைக்கவும்.
- நன்கு ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.
- பின்னர் அதில் ½ கப் தேங்காய், சிறிதளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- இறுதியாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைக்கவும்.
- இந்த சட்னி கெட்டியாக இருந்தால்தான் சுவையாக இருக்கும், எனவே தண்ணீரை குறைவாக சேர்க்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு சிறிய கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் அரை ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்கவும், கடுகு பொரிந்ததும் அதில் அரை ஸ்பூன் உளுந்து, சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் ஒரு வர மிளகாய் சேர்த்து தாளித்து சட்னி மீது கொட்டவும்.
- அவ்வளவுதான் எளிதான மற்றும் சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி!
- இதை சூடான இட்லி, தோசையுடன் சாப்பிட்டு மகிழுங்கள்.



Click it and Unblock the Notifications











