Latest Updates
-
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை
மீந்து போன இட்லி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிடத்தில் இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்..
Idli Vada Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் சுட்டு வைத்த இட்லி மீந்து போயிருக்கா? அப்படி இட்லி மீந்து போனால் அதை கொண்டு இதுவரை உப்புமா தான் செய்திருப்பீர்கள். ஆனால் அந்த மீந்து போன இட்லியைக் கொண்டு மாலை வேளையில் அருமையான சுவையில் வடையை சுடலாம் என்பது தெரியுமா?
இப்படி இட்லி கொண்டு செய்யப்படும் வடை, உளுந்து கொண்டு தயாரிக்கப்படும் வடையைப் போன்று மொறுமொறுவென்று இருக்கும். அதோடு ஒருமுறை இப்படி வடையை செய்தால், பின் எப்போதும் இப்படி தான் வடையை செய்து சாப்பிடுவீர்கள்.

உங்களுக்கு மீந்து போன இட்லி கொண்டு எப்படி வடை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன இட்லி - 6
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மீந்து போன இட்லிகளை நன்கு உதிர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அத்துடன் அரிசி மாவு, 1/4 டீஸ்பூன் உப்பு, பொடியாக நறுக்கிய
கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி, கைகளால் நன்கு
பிசைந்து விட வேண்டும்.
* பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை தெளித்து, சப்பாத்தி மாவை விட
சற்று மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் கையில் சிறிது எண்ணெயை தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை
கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, தட்டையாக தட்டி, நடுவே துளையிட்டு
ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடையை போட்டு,
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இட்லி வடை தயார்.



Click it and Unblock the Notifications











