Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
வீட்ல இட்லி ரொம்ப மீந்து போயிருச்சா? அப்ப இந்த மாதிரி டேஸ்ட்டான வடை செஞ்சுருங்க... டக்குனு காலியாகிரும்...!
வீட்டில் பெரும்பாலும் மீதமாகும் உணவுகளை வீணாக்காமல் நம் சாப்பிடு உடலை கெடுத்து கொள்ளவது நம்மில் பலரின் வழக்கம். இதற்கு காரணம், கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து, கிச்சனில் நேரம் எடுத்து சமைத்த உணவை வீணாக்க மனமில்லது தான். இதற்கான மாற்று வழியாக மீதமானவற்றில் பல மாற்றுவழிகளை கையாண்டாலும், சிறிது காலத்தில் அவை அலுத்துவிடும்.
நாம் மீண்டும் புதுமையை தேடி ஓட வேண்டி இருக்கும். அப்படி மிதமான இட்லி என்றவுடன், நமக்கு நியாபகம் வருவது சூரியவம்சம் படமும் அதில் கதாநாயகி செய்யும் உப்புமா-வும் தான். அன்றைய காலத்தில் வீடுகளில் இட்லி உப்புமா பேமஸ் ஆக இருக்க இதுவும் காரணமாக இருந்தது.

இப்போதை குழந்தைகளிடம் இட்லி உப்புமா என்றால், நம்மை ஏற இறங்க பார்ப்பார்கள். இன்றை குழந்தைகளை ஏமாற்றி, மிதமான இட்லியை செல்லுபடியாக்க நாம் இந்த முறையை கையாளலாம். அப்படி என்ன செய்ய போறீங்கன்னு கேக்கறது புரியுது. மிதமான இட்டிலியை வைத்து ஈஸியா செய்யலாம் இட்லி வடை. எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மீதமான இட்லி - 3
சின்ன வெங்காயம் - 12 - 15
மிளகு - ¼ ஸ்பூன்
சீரகம் - ¼ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 அல்லது 2 (காரத்திற்கு ஏற்ப சேர்த்து
கொள்ளவும்)
இஞ்சி - ½ ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
அரிசிமாவு - ½ ஸ்பூன்
ரவை - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
செய்முறை:
இட்லி கடினமாகவோ அல்லது வறண்டது போல் இருந்தால், சிறிதளவு நீரில் 5 நிமிடங்கள் போட்டு வைக்கவும். பச்சைமிளகாய், இஞ்சி, மற்றும் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். கருவேப்பில்லை மற்றும் கொத்தமல்லியை நறுக்கி கொள்ளவும். நீரில் சேர்த்த இட்லியை தனியே எடுத்து நன்றாக உடைத்து விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம், ரவை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
இதனுடன் தேவைக்கு ஏற்ப சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும். சிறிது தண்ணீர் அதிகமா இருந்தால் அதற்கு ஏற்ப அரிசிமாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும். இந்த கலவையை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். பின், பொறிக்க தேவையான எண்ணெயை அடுப்பில் வைத்து, நன்றாக எண்ணெய் காய்ந்ததும், உருண்டைகளை கையால் அழுத்தி, அதில் ஓட்டை போட்டு எண்ணையில் சேர்த்து பொரிக்கவும். சுவையான இட்லி வடை ரெடி.



Click it and Unblock the Notifications












