Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
மூட்டு வலிகளுக்கு உகந்த முடக்கத்தான் தோசை.. இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்கள்..!
முடக்கத்தான் கீரையில் தோசை செய்து சாப்பிட்டுயிருக்கீங்களா? இந்த தோசையை தென் மாவட்ட மக்கள் இன்றும் வாரம் ஒருமுறையாவது செய்து சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கீறார்கள். அதனால்தான் என்னவோ அவர்களுக்கு அவ்வளவாக முலங்கால் கை வலிகள் வராது.. மூட்டு வலியும் வராது..
அதற்கு காரணம் , இந்த முடக்கதான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிகமாக இருக்கு. இதை உணவுல தொடர்ந்து சேர்த்துட்டு வந்தால் வாத நோய்கள் வராது.. அதிலும் இந்த வாத நோய்கள் மழை மற்றும் குளிர் காலங்களான ஆகஸ்ட், செப்டம்பர் , அக்டோபர் மற்றும் டிசம்பரில்தான் அதிகமாக வரும் என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த முடக்கத்தான் கீரை, வாத நோய்களுக்கு நல்ல தீர்வா இருக்கும். அதனால் இந்த மழை மற்றும் குளிர் காலத்தில் கண்டிப்பாக இந்த கீரையை எடுத்துக்கோங்க.. வாங்க இந்த ம்டக்கத்தான் கீரையில் தோசை எப்படி செய்வது என்பது குறித்த ரெசிபியை பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்
1. அரிசி
2. வெந்தயம்
3. எண்ணெய்
4. உப்பு
5. முடக்கத்தான் இலை
செய்முறை
1. முதலில் அரிசியை சுத்தம் செய்து கல் நீக்கிக் களைந்து சில மணி நேரங்களுக்கு நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
2. அவ்வாறு நன்கு ஊற வைத்த அரிசியுடன் வெந்தயம், முடக்கத்தான் இலை ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு பக்குவத்தில் உடன் உப்பும் சேர்த்து அரைத்து, கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்..
3. பின்னர் அரைத்த மாவை புளிக்க வைத்து தோசையாக வார்த்து சாப்பிட பித்தம் தணியும்.
முடக்கத்தான் மூட்டு வலியை போக்கும் தன்மை கொண்டது. நாற்பது வயதைக் கடந்தவர்கள் இதனை அதிகம் சேர்த்துக் கொள்ளுவது நல்லது. அதுமட்டுமல்லாமல் இந்த முடக்கத்தான் கீரையை ரசமாகவும் வைக்கலாம்.. மாலை நேரத்தில் பருக நல்ல சூப்பாகவும் செய்துக் கொடுக்கலாம்.. எப்படி குடித்தாலும் இந்த கீரை உடலுக்கு நல்லது.. அதனால் இந்த ரெசிபியை வாரம் ஒருமுறை உங்க வீட்டில் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் செய்துக் கொடுப்பது நல்லது..
முடக்கத்தான் கீரையின் பயன்கள்
1. முடக்கத்தான் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் உண்டு வந்தால் சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும வியாதிகள் குணமாகும். இந்தக் கீரையை அரைத்து சருமத்தில் பூசி வந்தாலும் சரும நோய்கள் குணமாகும்.
2 . முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராததுடன், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி நெல்லிக்காய் அளவு எடுத்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர குடலிறக்கம் குணமாகும்.
3. முடக்கத்தான் கீரையை அரைத்து சாறு எடுத்து காதில் இரண்டு சொட்டு விட்டால் காது வலி குணமாகும்.
4. முடக்கத்தான் கீரை வாய்வு தொல்லையை நீக்கி மலச்சிக்கலை தீர்க்கும்.
5. முடக்கத்தான் கீரை நரம்புத் தளர்ச்சியை நீக்கி, நரம்புகள் வலிமை பெற உதவும்.



Click it and Unblock the Notifications











