Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
புரட்டாசி ஏகாதசி 2024.. பெருமாளுக்கு இதை நைய்வேதியம் செய்யுங்கள்..!
புரட்டாசி சனிக்கிழமைகள் எப்போதுமே சிறப்பு வாய்ந்தது.. நாளை புரட்டாசி 2வது சனிக்கிழமை.. அன்றைய தினம் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது நல்லது... புரட்டாசி சனிக்கிழமைக்கு அப்படி என்ன சிறப்பு என நினைக்கிறீர்களா? சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலம் இந்த புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் என்பது ஐதீகம்..
புரட்டாசி சனிக்கிழமைகளில் தளிகை அல்லது படையல் இட்டு வழிபடும் முறை உண்டு. முதல் சனிக்கிழமை மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் படையல் போடுவார்கள்.. புரட்டாசியின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மஹாளய பட்சம் நடக்கும் காலமாகும்... அதனால் அந்த நாட்களில் தளிகை போடமாட்டார்கள்.. அதற்கு பதிலாக பெருமாளுக்கு இந்த இனிப்பை நைவேத்தியமாக செய்து படையுங்கள்.. பாசி பருப்பு பாயாசத்தை நைவேத்தியமாக செய்து இலையில் வைத்து படையுங்கள்.. இந்த பாசி பருப்பு பாயாசத்தை செய்வது எப்படி? இதை செய்ய தேவையான பொருட்கள் என்னன்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

தேவையான பொருட்கள்
பாசி பருப்பு - ஒரு கப்
பச்சரிசி - கால் கப்
வெல்லம் - அரை கப்
நெய் - 2 ஸ்பூன்
முந்திரி திராட்சை - கால் கப்
செய்முறை
1. பாசி பருப்பை கடாயில் வறுத்துக் கொள்ளவும். அதை குக்கரில் 4 விசில் வரும் வரை வேக விடவும். பச்சரிசியை மைய கால் கப் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். வெல்லத்தை உருக்கிக் கொள்ளுங்கள்.
2. இபோது பருப்பு வெந்ததும் பச்சரிசி தண்ணீரை ஊற்றி கிளறவும். உருக்கிய வெல்லத்தையும் சேர்த்து கலக்கவும். கெட்டியான பதம் வரும் வரைக் கொதிக்க விடவும்.
3. இறுதியாக நெய் விட்டு முந்திரி சேர்த்து வதக்கி பாயாசத்தில் ஊற்றிக் கிளறவும். பாசி பருப்பு பாயாசம் தயார்.
4.இந்த பாசி பருப்பு பாயசத்தை கண்டிப்பாக குழந்தைகள் முதல் வீட்டில் உள்ள பெரியவர்கள் வரை அனைஇவரும் விரும்பி சப்பிடுவார்கள்..
பாசி பருப்பின் நன்மைகள்
பாசி பருப்புகள் பொதுவாகவே உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும், பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் உள்ள குறைந்த கலோரி எடையைக் கட்டுப்படுத்தும். பசியைக் கட்டுப்படுத்தும் நார்ச்சத்தும் இதில் போதுமான அளவில் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், நீங்கள் மீண்டும் மீண்டும் பசியை உணர மாட்டீர்கள், இதன் விளைவாக எடையைக் குறைப்பதில் உதவி கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











