Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
புரட்டாசி ஏகாதசி 2024.. பெருமாளுக்கு இதை நைய்வேதியம் செய்யுங்கள்..!
புரட்டாசி சனிக்கிழமைகள் எப்போதுமே சிறப்பு வாய்ந்தது.. நாளை புரட்டாசி 2வது சனிக்கிழமை.. அன்றைய தினம் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது நல்லது... புரட்டாசி சனிக்கிழமைக்கு அப்படி என்ன சிறப்பு என நினைக்கிறீர்களா? சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலம் இந்த புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் என்பது ஐதீகம்..
புரட்டாசி சனிக்கிழமைகளில் தளிகை அல்லது படையல் இட்டு வழிபடும் முறை உண்டு. முதல் சனிக்கிழமை மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் படையல் போடுவார்கள்.. புரட்டாசியின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மஹாளய பட்சம் நடக்கும் காலமாகும்... அதனால் அந்த நாட்களில் தளிகை போடமாட்டார்கள்.. அதற்கு பதிலாக பெருமாளுக்கு இந்த இனிப்பை நைவேத்தியமாக செய்து படையுங்கள்.. பாசி பருப்பு பாயாசத்தை நைவேத்தியமாக செய்து இலையில் வைத்து படையுங்கள்.. இந்த பாசி பருப்பு பாயாசத்தை செய்வது எப்படி? இதை செய்ய தேவையான பொருட்கள் என்னன்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

தேவையான பொருட்கள்
பாசி பருப்பு - ஒரு கப்
பச்சரிசி - கால் கப்
வெல்லம் - அரை கப்
நெய் - 2 ஸ்பூன்
முந்திரி திராட்சை - கால் கப்
செய்முறை
1. பாசி பருப்பை கடாயில் வறுத்துக் கொள்ளவும். அதை குக்கரில் 4 விசில் வரும் வரை வேக விடவும். பச்சரிசியை மைய கால் கப் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். வெல்லத்தை உருக்கிக் கொள்ளுங்கள்.
2. இபோது பருப்பு வெந்ததும் பச்சரிசி தண்ணீரை ஊற்றி கிளறவும். உருக்கிய வெல்லத்தையும் சேர்த்து கலக்கவும். கெட்டியான பதம் வரும் வரைக் கொதிக்க விடவும்.
3. இறுதியாக நெய் விட்டு முந்திரி சேர்த்து வதக்கி பாயாசத்தில் ஊற்றிக் கிளறவும். பாசி பருப்பு பாயாசம் தயார்.
4.இந்த பாசி பருப்பு பாயசத்தை கண்டிப்பாக குழந்தைகள் முதல் வீட்டில் உள்ள பெரியவர்கள் வரை அனைஇவரும் விரும்பி சப்பிடுவார்கள்..
பாசி பருப்பின் நன்மைகள்
பாசி பருப்புகள் பொதுவாகவே உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும், பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் உள்ள குறைந்த கலோரி எடையைக் கட்டுப்படுத்தும். பசியைக் கட்டுப்படுத்தும் நார்ச்சத்தும் இதில் போதுமான அளவில் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், நீங்கள் மீண்டும் மீண்டும் பசியை உணர மாட்டீர்கள், இதன் விளைவாக எடையைக் குறைப்பதில் உதவி கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











