Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
அட்டகாசமான மும்பை பட்டாணி மசாலா ரெசிபி... செஞ்சு பாருங்க... சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும்...!
Green Peas Masala Recipe in Tamil: இட்லி, தோசைக்குப் பிறகு பொதுவாக அதிகளவு மக்களால் விரும்பி சாப்பிடப்படும் உணவென்றால் சப்பாத்தி மற்றும் பூரிதான். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பெரும்பாலும் விரும்பி சாப்பிடும் உணவு சப்பாத்திதான். பொதுவாக சப்பாத்தி செய்தால் அதற்கு உருளைக்கிழங்கு குருமாதான் செய்வோம். நமது ஆழ்மனதில் சப்பாத்திக்கு அதுதான் சிறந்த சைடிஷ் என்ற எண்ணம் உருவாகிவிட்டது.
ஆனால் சப்பாத்திக்கு அதைவிட பல சூப்பரான சைடிஸ்கள் உள்ளது. அதில் ஒன்றுதான் பட்டாணி மசாலா. இந்த பட்டாணி மசாலா வடநாட்டு ஸ்டைலில் செய்யக்கூடியது மற்றும் வித்தியாசமான சுவையுடையது. இந்த பட்டாணி மசாலா ஹோட்டல்களில் செய்யப்படுவதை விட அருமையான சுவையில் இருக்கும். இந்த சூப்பரான பட்டாணி மசாலாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 1 கப் பச்சை பட்டாணி
- 2 நறுக்கிய வெங்காயம்
- 4 தக்காளி
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ¼ ஸ்பூன் வெந்தயம்
- ¼ ஸ்பூன் சீரகம்
- 2 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
- 2 ஸ்பூன் மல்லித்தூள்
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ ஸ்பூன் கரம் மசாலா
- கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி
- ¼ டீஸ்பூன் சர்க்கரை
- 1 ஸ்பூன் வெண்ணெய்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 அங்குல இலவங்கப்பட்டை
- 1 ஏலக்காய்
- 2 கிராம்பு
செய்முறை:
- முதலில் வெந்தயம் மற்றும் சீரகத்தை ஒரு பாத்திரத்தில் சில துளிகள் எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும்.
- இது ஆறியதும் பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் 1 தேக்கரண்டி எண்ணெயைச் சேர்த்து, எண்ணெய் சூடானதும் அதில் இஞ்சி, பூண்டு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
- இது நன்கு ஆறியதும் குளிர வைத்து பின்னர் மிக்ஸியில் அரைக்கவும்.
- பின்னர் குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கிராம்பு, ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் அரைத்த வெங்காய தக்காளியைச் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- மசாலா நன்கு வதங்கியதும் அதில் பட்டாணி சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் கால் ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.
- பின்னர் குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- விசில் அடங்கியதும் மூடியைத் திறந்து அதில் வெந்தயம் மற்றும் சீரகப்பொடியை சேர்த்து கிளறவும்.
- மசாலா நன்கு கொதித்ததும் அதில் வெண்ணெய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
- சுவையான பட்டாணி மசாலா ரெடி. சப்பாத்தி மற்றும் பூரியுடன் சூடாக பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications











