Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
Godhumai Rava Adai Recipe in Tamil: தினமும் காலையில் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை ரவை உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை ரவையை வைத்து வழக்கம் போல உப்பு செய்யாமல், அடை செய்து சாப்பிடுங்கள்.
இந்த அடை வழக்கமாக சாப்பிடும் அடையை விட வித்தியாசமான சுவையில், அதே வேளையில் சுவையாக விரும்பி சாப்பிடக்கூடியவாறு மொறுமொறுவென்றும் இருக்கும். இந்த அடைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி போன்றவை அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். முக்கியமாக செய்வதற்கு இது சுலபமாக இருக்கும். பேச்சுலர்கள் இதை எளிதில் செய்து விடலாம்.

உங்களுக்கு கோதுமை ரவை அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவை அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊறவைக்க:
- 1 கப் கோதுமை ரவா
- ¼ கப் துவரம் பருப்பு
- ¼ கப் கடலை பருப்பு
- ¼ கப் பாசிப்பருப்பு
- ¼ கப் உளுத்தம் பருப்பு
- 3 வர மிளகாய்
- 6 பூண்டு பல்
அடை செய்ய:
- ¼ கப் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- ¼ டீஸ்பூன் பெருங்காயம்
- 1 டீஸ்பூன் சீரகத் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு தேங்காய் எண்ணெய்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில், ஊற வைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போதுமான தண்ணீரில் ஊறவைத்து, 4 முதல் 6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- காலையில் நன்றாக கழுவி வடிகட்டி விட்டு மிகவும் குறைவான அளவு தண்ணீரைச் சேர்த்து, கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அரைத்த மாவில், நறுக்கிய கொத்தமல்லி இலைகள், உப்பு, சீரகத் தூள் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
- அடை சுட ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
- ஒரு கரண்டி மாவை எடுத்து நீங்கள் விரும்பும் தடிமனுக்கு அடையை ஊற்றவும். மொறுமொறுப்பாக வேண்டுமென்றால் மெலிதாக ஊற்றவும்.
- ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சுற்றிலும் ஊற்றி, அடிப்பகுதி பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
- இருபுறமும் வெந்ததும் தோசைக்கல்லிலிருந்து தட்டுக்கு மாற்றவும்.
- சூடான அடையை தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications











