Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
காலிஃப்ளவரை இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க... சாதத்தோட சாப்பிட வேற லெவல் சைடிஷாக இருக்கும்...!
Gobi Masala Recipe in Tamil: காய்கறிகளிலேயே வெகுசில காய்கறிகள் மட்டுமே அனைவருக்கும் பிடித்த காய்கறிகளாக இருக்கும். அப்படி அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றுதான் காலிஃப்ளவர். பொதுவாக காலிஃப்ளவரை சில்லியாக சாப்பிடவோ அல்லது மஞ்சூரியனாகவோ சாப்பிட விரும்புவார்கள். உண்மையில் காலிஃப்ளவரை பொரியல், குருமா என எப்படி வேண்டுமென்றாலும் சுவையாக சமைக்கலாம்.
இந்த பதிவில் வித்தியாசமான சுவையில் காலிஃப்ளவர் மசாலாவை எப்படி செய்யலாமென்று தெரிந்து கொள்ளலாம். இந்த காலிஃப்ளவர் மசாலா சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். மேலும் இதை வெறும் சாதத்தில் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம்.

உங்கள் குழந்தைகளுக்கு வழக்கமான சாம்பார், ரசம் என சமைத்துக் கொடுத்து போரடித்து விட்டதா? அப்படியெனில் இந்த கோபி மசாலாவை செய்து கொடுத்து வீட்டில் எல்லோரையும் அசத்துங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- பெரிய காலிஃப்ளவர் - ஒன்று
- பெரிய வெங்காயம் - 3
- தக்காளி - 2
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- வரமிளகாய் - 4
தாளிக்க:
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுந்து - அரை ஸ்பூன்
- தட்டிய பூண்டு - 5
- கடலைப்பருப்பு - அரை ஸ்பூன்
அரைப்பதற்கு:
- தேங்காய் - கால் மூடி
- நிலக்கடலை - 2 கைப்பிடி
- தனியா - ஒரு கைப்பிடி
- மிளகு - அரை ஸ்பூன்
- வர மிளகாய் - 5
- பூண்டு -ஒன்று
- பட்டை - ஒரு துண்டு
- கிராம்பு - 4
செய்முறை:
- அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய், பூண்டு தவிர அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- நிலக்கடலையை தோல் நீக்கி நீர் சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
- வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- காலிஃப்ளவரை நன்றாக சுத்தம் செய்து பிரித்து வெந்நீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும்.
- வறுத்து வைத்த மசாலாப் பொருட்களை தேங்காய் மற்றும் பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். பின்னர் தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- பின்னர் அதில் அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும். பின் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- பின்னர் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.
- பின் காலிஃப்ளவரை சேர்த்து கிளறி தேவையான அளவு நீர் சேர்த்து வேக விடவும்.
- மசாலா நன்கு கொதித்து கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
- அட்டகாசமான கோபி மசாலா தயார்.
- இந்த கோபி மசாலா சாம்பார், ரசம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும், வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











