Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
வெந்தயக்கீரை கொண்டு ஒருமுறை இப்படி சாம்பார் செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்.. சத்தானதும் கூட...
Vendhya Keerai Sambar Recipe In Tamil: தற்போது வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை சமைத்து சாப்பிட்டால் தான், உடல் சூட்டை தணிக்க முடியும். உடல் சூட்டைக் குறைக்க வேண்டுமானால், கீரைகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
அதுவும் வெந்தய கீரையை உணவில் சேர்த்து வந்தால், உடலும் குளிர்ச்சி அடையும், உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும். அதற்கு வெந்தயக்கீரையை பொரியல் செய்வதற்கு பதிலாக, சாம்பார் செய்யுங்கள். இதனால் சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம், சுவையும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு வெந்தய கீரை சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தய கீரை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெந்தயக்கீரை - 1 கட்டு (சுத்தம் செய்தது)
* துவரம் பருப்பு - 1/2 கப்
* புளி நீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரை எடுத்து, அதில் துவரம் பருப்பை போட்டு நீரில் 2
முறை கழுவி, 1 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள வெந்தயக் கீரையை
சேர்த்து சுருள வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பு மசித்து சேர்த்து ஒரு
கொதி விட வேண்டும்.
* பிறகு அதில் புளி நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மிளகாய்
தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து கலந்து, சாம்பாருக்கு தேவையான
அளவு நீரை ஊற்றி, பெருங்காயத் தூள் சேர்த்து, 5 நிமிடம் பச்சை வாசனை
போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வெந்தயக்கீரை சாம்பார்
தயார்.



Click it and Unblock the Notifications











