Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செஞ்சு சாப்பிடுங்க.. சுவை அள்ளும்...
Murungai Keerai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சட்னி செய்வதென்று தெரியலையா? ஒரே மாதிரி சட்னி செய்தும் போரடித்துவிட்டதா? வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? அப்படியானால் அந்த முருங்கைக்கீரையைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.
இந்த சட்னியை செய்தால், முருங்கைக்கீரையில் தான் செய்தீர்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவில் சட்னி அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்கீரை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 3 பெரிய சில்லு (பொடியாக நறுக்கியது)
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் உளுத்தம் பருப்பு, பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக
வறுத்து இறக்கி ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், முருங்கைக்கீரையை சேர்த்து நன்கு சுருங்க வதக்க்கி
இறக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் தேங்காயை எடுத்து நீர் சேர்க்காமல் நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வறுத்த வரமிளகாய், பொட்டுக்கடலை, உளுத்தம் பருப்பு
மற்றும் வதக்கிய முருங்கைக்கீரையை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் புளி மற்றும் சிறிது உப்பு மற்றும் நீர் சேர்த்து, நன்கு
மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, தாளிப்பதற்கு தேவையான அளவு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து
தாளித்து சட்னியுடன் சேர்த்தால், சுவையான முருங்கைக்கீரை சட்னி
தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications











