Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
ஒருடைம் செட்டிநாடு மிளகாய் மண்டி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. அம்புட்டு ருசியா இருக்கும்..
Chettinad Milagai Mandi Recipe In Tamil: மதிய வேளையில் சாதத்துக்கு சிம்பிளாக, அதே சமயம் சற்று காரசாரமாக ஏதாவது சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரி சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக அதே வேளையில் ருசியான சைடு டிஷ் செய்ய விரும்பினால், செட்டிநாடு மிளகாய் மண்டி செய்யுங்கள்.
இந்த செட்டிநாடு மிளகாய் மண்டி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குளிர்காலத்தில் செய்து சாப்பிட ஏற்றதாக இருக்கும். அதுவும் சளி பிடித்திருக்கும் போது இந்த மிளகாய் மண்டியை செய்து சாப்பிட்டால் சளி முறிந்து வெளியேறும். முக்கியமாக இது சட்டென்று செய்யக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு மிளகாய் மண்டி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மிளகாய் மண்டி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - 1 எலுமிச்சை அளவு
* அரிசி ஊற வைத்து கழுவிய நீர் - சிறிது
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 10 பல்
* பச்சை மிளகாய் - 5
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 டம்ளர்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து பிசைந்து வடிகட்டி சாறு
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வெந்தயம், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் சின்ன வெங்காயம், பூண்டு பற்களை சேர்த்து நன்கு
கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாயை லேசாக கீறிவிட்டு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் 1 டம்ளர் நீரை
ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் அரிசி ஊற வைத்து கழுவிய நீரை சிறிது ஊற்றி,
அத்துடன் புளிச்சாற்றினையும் ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, பச்சை வாசனை போய் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான செட்டிநாடு மிளகாய் மண்டி தயார்.



Click it and Unblock the Notifications