Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
ருசியான... செட்டிநாடு குழி பணியாரம் செய்வது எப்படி?
உங்கள் வீட்டில் உள்ளோர் பணியாரத்தை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பணியாரத்தை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு குழி பணியாரத்தை செய்து கொடுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோர் பணியாரத்தை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பணியாரத்தை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு குழி பணியாரத்தை செய்து கொடுங்கள். இந்த செட்டிநாடு குழி பணியாரம் செய்வது மிகவும் சுலபம். இந்த பணியாரத்தை காலை உணவாகவும், இரவு உணவாகவும் சாப்பிடலாம். இந்த பணியாரத்திற்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி போன்றவை சிறந்த சைடு டிஷ்களாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு குழி பணியாரம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு குழி பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 1/4 கப்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
செய்முறை:
* முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை நீரில் 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதை நன்கு கழுவி, கிரைண்டர் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த மாவை ஊற்றி, அத்துடன் உப்பு சேர்த்து கலந்து, மூடி வைத்து குறைந்தது 8 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் நொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து, சிறிது உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* அடுத்து வதக்கியதை பணியார மாவில் சேர்த்து கிளற வேண்டும். இப்போது பணியார மாவு தயார்.
* பின்பு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், சிறு குழி கரண்டியில் பணியார மாவை எடுத்து, பணியாரக் குழிகளில் ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் பணியாரத்தை திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், செட்டிநாடு குழி பணியாரம் தயார். இந்த பணியாரம் தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
குறிப்பு:
* இந்த பணியார மாவுடன் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம்.
* வீட்டில் தோசை மாவு இருந்தால், அதைக் கொண்டும் குழி பணியாரம் செய்யலாம்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications










