Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 25 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
June 2026 Horoscope: ஜூன் மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்களால் கோடீஸ்வர யோகத்தை பெறும் 3 ராசிகள் -
குடைமிளகாயை வைச்சு இப்படி வித்தியாசமா குருமா செய்யுங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
9 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் டீத்தூள் - இந்த டீத்தூள் எந்த நாட்டில் விளைகிறது? இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா? -
வெயிலால் வீட்டில் அடிக்கடி சண்டையா? உங்கள் கோபத்திற்குப் பின்னால் இருக்கும் இந்த உண்மை தெரியுமா? -
நியூமராலஜி படி இந்த 3 தேதிகளில் பிறந்த குழந்தைங்கள் அவங்க பெற்றோரை கோடீஸ்வரராக்கப் பிறந்தவர்களாம் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் எது-ன்னு சொல்லுங்க.. உங்களோட குணத்தை சொல்றோம்.. -
வெயில் கொடுமையால் தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டையா? இந்த ஒரு விஷயத்தை மட்டும் மாத்துங்க, உறவு இனிக்கும்! -
சாணக்கிய நீதி படி ஆண்களிடம் நாயின் இந்த 5 குணங்கள் இருக்க வேண்டுமென்று பெண்கள் ஆசைப்படுவார்களாம் -
கோடை வெயிலால் முகம் கருப்பாகாம இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை வெச்சு ஃபேஸ் பேக் போடுங்க..
சப்பாத்தி, பூரிக்கு இப்படி குருமா செய்யுங்க.. வழக்கமா சாப்பிடுறத விட எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Chapati Kurma Without Vegetables In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி, பூரி செய்வீர்களா? அதற்கு பெரும்பாலும் உருளைக்கிழங்கு மசாலாவைத் தான் சைடு டிஷ் செய்வீர்களா? இல்லாவிட்டால் வெஜிடேபிள் குருமா செய்வீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் வெங்காயம், தக்காளி தான் உள்ளதா? அப்படியானால் கவலை வேண்டாம்.

வெறும் வெங்காயம், தக்காளியைக் கொண்டே அருமையான சுவையில் சப்பாத்தி குருமாவை செய்யலாம். இந்த குருமா வெறும் சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குருமா 10 நிமிடத்தில் சட்டென்று செய்யக்கூடியவாறு இருக்கும்.
இந்த சப்பாத்தி குருமா குறித்து ஸ்ரீதமிழ் சேனல் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த சப்பாத்தி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சப்பாத்தி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* தண்ணீர் - 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
பொடிப்பதற்கு...
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 3/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு
சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்ய வேண்டும்.
* பின் அதில் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் சோம்பை சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் பொடித்த பொட்டுக்கடலை மாவுடன், நீர் சேர்த்து கட்டிகளின்றி
கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த பொட்டுக்கடலை கலவையை வதங்கி கொண்டிருக்கும் தக்காளியுடன்
சேர்த்து கிளறி, 1 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
சப்பாத்தி குருமா தயார்.



Click it and Unblock the Notifications