Latest Updates
-
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
Avarakkai Kootu Recipe in Tamil: பொதுவாக சாம்பார், புளிக்குழம்பு என எதுவாக இருந்தாலும் அதற்கு ஏதாவது ஒரு காய்கறியை வைத்து பொரியல் செய்து விடுவோம். அதேசமயம் என்ன காய்கறியை பொரியல் செய்வது என்பது அடுத்த கவலையாகும். சாம்பார், ரசம் போன்றவற்றுக்கு பொதுவாக பொரியல்தான் சைடிஷாக செய்வார்கள், ஆனால் பொரியல் போலவே சாதத்துக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும் மற்றொரு ஐட்டம் என்றால் அது கூட்டுதான்.

பொதுவாக கூட்டு என்பது பூசணிக்காய், சுரைக்காய் மற்றும் புடலங்காயை வைத்துதான் செய்வார்கள், ஆனால் உண்மையில் சில வித்தியாசமான காய்கறிகளை வைத்து கூட்டு செய்யலாம். அப்படி ஒரு தனித்துவமான மற்றும் வித்தியாசமான காய்தான் அவரைக்காய். பெரும்பாலான மக்கள் அவரைக்காயை சாம்பரில்தான் போடுவார்கள், சிலர் பொரியல் செய்வார்கள். ஆனால் அவரைக்காயை வைத்து அட்டகாசமான கூட்டும் செய்யலாம்.
உங்களுக்கு சுவையான அவரைக்காய் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவரைக்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுடிவத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அவரைக்காய் - கால் கிலோ
- பாசிப்பருப்பு - 1 ஸ்பூன்
- தக்காளி - 1
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- சர்க்கரை - 1/4 ஸ்பூன்
- சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
அரைக்க:
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- அரிசி மாவு - 1 தேக்கரண்டி
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- அவரைக்காய் மற்றும் தக்காளியை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை கழுவி வைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் மற்றும் அரிசி மாவைச் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய அவரைக்காய் மற்றும் தக்காளியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் சாம்பார் தூள், மஞ்சள் தூள், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பச்சை வாசனை போனதும் கழுவி வைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- இறுதியாக, தேவையான அளவு தண்ணீர் மற்றும் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். பிறகு அடுப்பை அணைக்கவும்.
- பிரஷர் வெளியேறியதும் குக்கரை திறந்து அடுப்பை நன்றாக கிளறினால் சுவையான அவரைக்காய் கூட்டு ரெடி!
- இதை சூடான சாதத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications