Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இட்லி, தோசை மாவு இல்லையா? 1 கப் பச்சரிசி வெச்சு காலையில் இப்படியொரு காலை டிபனை செஞ்சு பாருங்க...
Arisi Upma Recipe: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை சுட மாவு இல்லையா? என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் பச்சரிசி இருந்தால், அதைக் கொண்டு அரிசி உப்புமா செய்யுங்கள். இந்த அரிசி உப்புமா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். முக்கியமாக காலையில் ஆரோக்கியமான டிபனை சாப்பிட நினைத்தால், இந்த அரிசி உப்புமாவை செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
உங்களுக்கு அரிசி உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரிசி உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 டம்ளர்
* துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 3/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - 3 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
செய்முறை:
* முதலில் அரிசி மற்றும் பருப்பை நீரில் 2 முறை கழுவி, நீரை
முற்றிலும் வடித்துவிட்டு, ஒரு வட்டியில் போட்டு 20 நிமிடம் அப்படியே
உலர விட வேண்டும்.
* பின்பு அவற்றை மிக்சர் ஜாரில் எடுத்து, அத்துடன் மிளகு, சீரகம்
சேர்த்து, ரவா பதத்திற்கு ஒருமுறை லேசாக அடித்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பருப்பு பொன்னிறமானதும், அதில் பெருங்காயத் தூள், பச்சை மிளகாய்,
வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, 3 டம்ளர் நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி நன்கு
கொதிக்க ஆரம்பித்ததும், பொடித்து வைத்துள்ள அரிசியை சேர்த்து
தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* நீர் ஓரளவு வற்றியதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வைத்து,
10 நிமிடம் வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது, அவ்வப்போது
மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* 10 நிமிடம் ஆனதும், அடுப்பை அணைத்துவிட்டு, மூடியைத் திறந்து,
உப்புமாவை கிளறி விட வேண்டும். பின் மீண்டும் மூடி வைத்து 10 நிமிடம்
அப்படியே வைத்துவிட்டு, அதன் பின் பரிமாறினால், சுவையான அரிசி உப்புமா
தயார்.
Image Courtesy: Vidhya's Vegetarian Kitchen



Click it and Unblock the Notifications