Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
ஆந்திரா ஸ்டைல் சுவையான தக்காளி பச்சடி ரெசிபி... இட்லி, தோசை மற்றும் சாதத்துக்கு செம சைடிஷ் இதுதான்...!
Andhra Style Tomato Pachadi: காரசாரமான உணவு என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ஆந்திராதான். ஒரு பாரம்பரிய ஆந்திர உணவு எப்போதும் காரமான, சூடான மற்றும் கசப்பான பச்சடியைக் கொண்டிருக்கும். இந்த பச்சடிகள் பெரும்பாலும் தக்காளி, கத்தரிக்காய், பாகற்காய், சுரைக்காய், கேரட் போன்ற அனைத்து வகையான காய்கறிகளாலும், கோங்குரா மற்றும் கொத்தமல்லி இலை போன்ற கீரைகளை வைத்தும் தயாரிக்கப்படுகின்றன.
இதில் தக்காளி பச்சடி முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த ஆந்திரா தக்காளி பச்சடி, தக்காளியை வறுப்பது அல்லது பச்சை வாசனை போகும் வரை வதக்குவதன் தயாரிக்கப்படுகிறது. அவை நன்கு குளிர்ந்து பின்னர் வறுத்த பருப்பு அல்லது எள், சீரகம், பூண்டு, சிவப்பு அல்லது பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கப்படுகின்றன. இந்த சுவையான தக்காளி பச்சடியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 5 காய்ந்த மிளகாய்
- 2 கப் நறுக்கிய தக்காளி
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு அல்லது 2 ஸ்பூன் எள்
- ¾ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- ½ தேக்கரண்டி சீரகம்
- 1/2 ஸ்பூன் மஞ்சள்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 3 பல் பூண்டு அல்லது 1/4 ஸ்பூன் இஞ்சி
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- கறிவேப்பிலை சிறிதளவு
- 1 காய்ந்த மிளகாய்
- 1 சிட்டிகை சீரகம்
- 1 சிட்டிகை கடுகு
- 1 சிட்டிகை உளுத்தம் பருப்பு
- பெருங்காயம் சிறிதளவு
- 1 பல் பூண்டு நசுக்கியது
செய்முறை:
- ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கவும். காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்துத் தாளிக்கவும். அவை பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். சிவப்பு மிளகாய் மிருதுவாக மாற வேண்டும். ஒருவேளை எள்ளைப் பயன்படுத்தினால் சிறிது சிறிதாக சேர்த்து வறுக்கவும்.
- பிறகு சீரகம் சேர்த்து சில நொடிகள் வறுக்கவும். பச்சை வாசனை போனதும் அதனை குளிர வைக்கவும்.
- அதே கடாயில் தக்காளி, பூண்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். தக்காளி முற்றிலும் மென்மையாக மாறும் வரை வதக்கவும். தேவைப்பட்டால் மூடி வைத்து சமைக்கவும். நன்கு வெந்ததும் குளிர வைக்கவும்.
- ஒரு மிக்சியில் வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் சேர்க்கவும். அவற்றை நன்றாக பொடி யாக அரைக்கவும்.
- தக்காளி சேர்த்து அரைக்கவும். உங்களுக்கு எப்படிப்பட்ட பதத்தில் பச்சடி வேண்டுமோ அவ்வளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- சுவை சோதித்துப் பார்த்து அதன்பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- சட்னியைத் தாளிக்க கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். கடுகு சீரகம், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்க்கவும். நீங்கள் விரும்பினால், நீங்கள் ஒரு பல் பூண்டு சேர்க்கலாம். கறிவேப்பிலை மிருதுவாக மாறும்வரை வதக்கிவிட்டு அடுப்பை அணைக்கவும். இப்போது கடாயில் பச்சடியை சேர்த்து நன்கு கலக்கவும்.



Click it and Unblock the Notifications
