ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும்

Posted By:

Andhra Style Palak Chutney Recipe in Tamil: பொதுவாகவே கீரைகளில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்திருக்கும். கீரைகளை சாப்பிடுவது பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடிக்காது. ஏன் சில பெரியவர்களுக்கு கூட பிடிக்காது தான். அதிலும் பாலக் கீரை, முருங்கை கீரை, மணத்தக்காளி கீரை, மற்றும் அகத்தி கீரைகளை முற்றிலும் சிலர் தவிர்த்து விடுவார்கள். ஆனால் இந்த கீரைகளில்தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது, எனவே அவற்றை எதாவது ஒரு வடிவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

Andhra Style Palak Keerai Chutney Recipe How to Make at Home in Tamil

கீரை பிடிக்காதவர்களையும் சாப்பிட வைக்க சிறந்த வழி அவற்றை சட்னி வடிவில் செய்து கொடுப்பதுதான். அதிலும் பாலக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது பல நன்மைகளை அளிக்கும். வெயில் காலம் தொடங்கியிருக்கும் காலகட்டத்தில் இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடலை வெயிலால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கும். உங்களுக்கு பாலக் கீரையை பிடிக்காது என்றால் ஆந்திரா ஸ்டைலில் சட்னியாக அரைத்து சாப்பிட்டுப் பாருங்கள். இதன் சுவை வேற லெவலில் இருக்கும். இந்த பாலக் கீரை சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை கீரை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 கட்டு பாலக் கீரை
- 2 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
- 2 தக்காளி (நறுக்கியது)
- 10 பல் பூண்டு
- 4 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 4 ஸ்பூன் மிளகாய்
- சிறிதளவு கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- ½ ஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 ஸ்பூன் தனியாதூள்
- தேவையான அளவு உப்பு

செய்முறை:

- முதலில், ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் 2 வெங்காயம், 2 தக்காளி மற்றும் 10 பூண்டு பற்களை எடுத்துக் கொரகொரப்பான விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- ஒரு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதில் 1 ஸ்பூன் கடுகு, 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 ஸ்பூன் கடலைப்பருப்பு, 4 வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

- கடுகு பொரிந்ததும், 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், ½ ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் கொத்தமல்லித் தூள் மற்றும் 1 ஸ்பூன் உப்பு சேர்க்கவும்.

- மசாலாப் பொருட்களிலிருந்து வாசனை வரும் வரை, மிதமான தீயில் வதக்கவும்.

- பின்னர் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி விழுதைச் சேர்த்து, நன்கு வதக்கவும்.

- கலவையிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

- பின்னர் நன்கு பொடியாக நறுக்கிய ஒரு கட்டு பாலக் கீரை மற்றும் 1 தேக்கரண்டி உப்பைச் சேர்த்து, நன்கு கிளறவும்.

- பாலக் கீரை நன்கு வெந்து, கலவையின் ஓரங்களிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை தொடர்ந்து கிளறவும்.

- கீரை நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை சட்னி ரெடி. இந்த பாலக் கீரை சட்னி சூடான சாதம், இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Monday, May 4, 2026, 21:39 [IST]
Desktop Bottom Promotion