Latest Updates
-
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி
ஆந்திரா ரெசிபிக்கள் அனைத்தும் காரமாகவும், தனிச் சுவையுடனும் இருக்கும். அதில் ஒன்று கடலைப்பருப்பு உசிலி அல்லது படோலி என்னும் சைடு டிஷ். இது கடலைப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான ரெசிபி.
ஆந்திரா ரெசிபிக்கள் அனைத்தும் காரமாகவும், தனிச் சுவையுடனும் இருக்கும். அதில் ஒன்று கடலைப்பருப்பு உசிலி அல்லது படோலி என்னும் சைடு டிஷ். இது கடலைப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான ரெசிபி. இது ரொட்டி, புல்கா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். கடலைப் பருப்பில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட.

இந்த ஆந்திரா கடலைப் பருப்பு உசிலி ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா? கீழே ஆந்திரா ஸ்டைல் கடலைப்பருப்பு உசிலி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை பருப்பு - 1 கப்
* பச்சை மிளகாய் - 1
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீபூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீபூன்
* சீரகம் - 1 டீபூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீபூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீபூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் பூன்
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்கவும்.
* பின் கடலைப் பருப்பைக் கழுவி, அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய் மற்றும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
* பிறகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வாக்கவும்.
* பின் அரைத்த கடலைப் பருப்பை சேர்த்து கிளறவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications











