காரசாரமான ஆந்திரா பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும்

Posted By:

Andhra Pachai Milagai Chicken Recipe in Tamil: சண்டே என்றாலே அது அசைவ உணவுக்கான நாள் என்றாகிவிட்டது. இந்த வாரமும் உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு ஒரு புதுவிதமான ரெசிபியை வீட்டில் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்களுக்கு காரசாரமான உணவுகள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் ஆந்திரா ஸ்பெஷல் பச்சை மிளகாய் சிக்கனை செய்து சாப்பிடுங்கள்.

Andhra Pachai Milagai Chicken Recipe How to Make at Home in Tamil

இந்த பச்சை மிளகாய் சிக்கனை வறுவலாகவும் சாப்பிடலாம் அல்லது குழம்பாகவும் சாப்பிடலாம் இந்த ஆந்திரா பச்சை மிளகாய் சிக்கன் மசாலா செய்து, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும், மேலும் சப்பாத்தி, தோசைக்கும் அட்டகாசமாக இருக்கும். சண்டே நாளில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைத்தால், இந்த பச்சை மிளகாய் சிக்கனை சுருக்குனு செய்யுங்க.

உங்களுக்கு இந்த ஆந்திரா ஸ்பெஷல் பச்சை மிளகாய் சிக்கன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்பெஷல் பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைக்க வேண்டியவை:

- பச்சை மிளகாய் - 10 (நான் காரம் குறைவான வகையைப் பயன்படுத்தியுள்ளேன்)
- கொத்தமல்லி இலைகள் - 1/2 கப்
- கறிவேப்பிலை - 10 இலைகள்
- புதினா இலைகள் - 1/4 கப்
- தண்ணீர் - 1/4 கப்
- வதக்கிய சின்ன வெங்காயம் - 4

கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

- சிக்கன் - 1 கப்
- பெரிய வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
- தக்காளி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி - 2 ஸ்பூன்
- பூண்டு - 10 பல்
- சீரகம் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
- மல்லித் தூள் - 2 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய்ப் பால் - 1/2 கப்
- கொத்தமல்லி இலைகள் - 2 மேசைக்கரண்டி (அலங்கரிக்கப் பொடியாக நறுக்கியது)
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

- ஒரு குக்கரில் எண்ணெய் சூடாக்கி, சீரகம் சேர்த்து அது வெடிக்கும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து, வெங்காயம் மென்மையாகவும், லேசாகப் பொன்னிறமாகவும் மாறும் வரை வதக்கவும்.

- இதில் சின்ன வெங்காயத்தை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு மிக்சி ஜாரில் பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் அந்தப் பொருட்களுடன், வதக்கி வைத்துள்ள சாம்பார் வெங்காயத்தையும் சேர்த்து கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

- பின்னர் வதக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும். அனைத்தும் நன்றாக ஒன்று சேரும் படி நன்கு கிளறவும்.

- சிக்கன் பாதி வெந்ததும் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறவும். இதை மூடி போட்டு 3 விசில் விடவும்.

- அழுத்தம் வெளியேறியதும் மூடியைத் திறந்து பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்து, குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.

- பச்சை வாசனை நீங்கும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.

- பச்சை வாசனை போனதும் கெட்டியான தேங்காய்ப்பாலை சேர்த்து, அது தேவையானப் பதத்திற்கு வரும் வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

- இறுதியாக சிறிது கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சிக்கன் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Sunday, July 26, 2026, 12:28 [IST]
Desktop Bottom Promotion