Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
காளான் வாங்குனா இந்த மாதிரி ஆம்பூர் ஸ்டைல் பிரியாணி செய்யுங்க... இனிமே ஹோட்டல் பக்கமே போக மாட்டிங்க...!
Ambur Style Mushroom Biryani Recipe in Tamil: பிரியாணியையும், நம்மையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நம் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். மொகலாயர்களின் கண்டுபிடிப்பான இந்த பிரியாணி இப்போது நமது உணவின் அடையாளமாகவே மாறிவிட்டது. பிரியாணி என்றாலே அது மட்டன் அல்லது சிக்கன் பிரியாணிதான். ஆனால் புரட்டாசி வரப்போவதால் பெரும்பாலான மக்கள் ஒரு மாதத்திற்கு அசைவ உணவு பக்கம் செல்ல முடியாது.
அசைவம் சாப்பிட முடியாத சூழலில் அனைவர்க்கும் கைகொடுப்பது காளான்தான். பிரியாணியில் திண்டுக்கல் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, தலசேரி பிரியாணி, முகலாய பிரியாணி என பல வகைகள் உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு பிரியாணி என்றால் அது ஆம்பூர் பிரியாணி.

ஆம்பூர் பிரியாணி செய்வதற்கு மிகவும் எளிமையான மற்றும் சுவையான பிரியாணியாகும். அதனால்தான் இந்த பிரியாணி மிகவும் பிரபலமானதாக உள்ளது. புரட்டாசி மாதத்தில் ஆம்பூர் ஸ்டைலில் காளான் பிரியாணி செய்து சாப்பிடுவது அசைவ உணவு இல்லாத குறையை ஓரளவுக்கு போக்கும். இந்த பதிவில் காளானை வைத்து சுவையான ஆம்பூர் பிரியாணி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் சீரக சம்பா அரிசி
- 1 கப் காளான்
- 6 வர மிளகாய்
- 1/4 கப் தயிர்
- உப்பு - தேவையான அளவு
- 3 ஸ்பூன் நெய்
- 2 பெரிய வெங்காயம்
- புதினா - ஒரு கைப்பிடி
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
- 2 தக்காளி
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 பச்சை மிளகாய்
- 2 கப் தண்ணீர்
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 4 கிராம்பு
- 2 பிரியாணி இலை
- 2ஏலக்காய்
- 2 இலவங்கப்பட்டை
செய்முறை:
- முதலில் சீரக சம்பா அரிசியை கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- வர மிளகாயை சூடான நீரில் 20 நிமிடங்கள் அல்லது மிளகாய் மென்மையாக மாறும் வரை ஊற வைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கர் அல்லது பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் ஏலக்காய், பிரியாணி இலை, நட்சத்திர சோம்பு, கிராம்பு சேர்த்து வதக்கவும்.
- பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடிப் பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் புதினா இலைகள், கொத்தமல்லி இலைகள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்த வர மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் தக்காளியைச் சேர்க்கவும், அது மென்மையாக மாறும் வரை வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் காளான் சேர்த்து நன்கு வதக்கவும்.
- காளான் பாதி வெந்ததும் தயிர் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் கழுவி வைத்த சீரக சம்பா அரிசியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- அரிசியை நன்கு கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- நன்கு கொதித்ததும் குக்கரை மூடி மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 1 விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து வேக வைக்கவும்.
- பின்னர் குக்கரை தம் போட்டு 10 நிமிடம் காத்திருக்கவும்.
- 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து இறுதியாக நெய் சேர்த்து நன்கு கிளறினால் சூடான, சுவையான ஆம்பூர் காளான் பிரியாணி ரெடி!



Click it and Unblock the Notifications