Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க..
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
Aama Vadai Recipe in Tamil: மாலை நேரம் வந்தாலே பெரும்பாலான மக்களுக்கு ஏதாவது சூடாக நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தினமும் கடையில் வாங்குவது என்பது அதிக செலவை ஏற்படுத்தும், ஆரோக்கியமற்றதும் கூட. எனவே வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து சுவையான நொறுக்குத்தீனி செய்வதே புத்திசாலித்தனம்.

அனைவருக்கும் பிடித்த நொறுக்குத்தீனி என்றால் அதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது வடைதான். பெரும்பாலான மக்களுக்கு உளுந்த வடை அல்லது பருப்பு வடைதான் பிடிக்கும், ஏனெனில் பெரும்பாலான மக்கள் ஆமை வடையை சாப்பிடுவதில்லை. ஆனால் ஆமை வடை மிகவும் சுவையானது மற்றும் செய்வதற்கு மிகவும் தனித்துவமானது. இது பார்ப்பதற்கு பருப்பு வடை போலவே இருந்தாலும் இது கொஞ்சம் வித்தியாசமானது.
உங்களுக்கு மொறுமொறுப்பான ஆமை வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆமை வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் கடலைப் பருப்பு
- ½ கப் துவரம் பருப்பு
- 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 பச்சை மிளகாய்
- 3 வர மிளகாய்
- ¼ டீஸ்பூன் பெருங்காயம்
- தேவையான அளவு உப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- வறுக்க தேவையான எண்ணெய்
செய்முறை:
- பருப்பு வகைகளை நன்றாகக் கழுவி, ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை ஒன்றாக ஊறவைக்கவும். பொதுவாக, ஒரு மணி நேரம் ஊறவைப்பதே போதுமானது.
- பருப்பு ஊறிய பிறகு, அதிலுள்ள தண்ணீரை வடித்து, சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். அரைக்கும் வரை அதை அப்படியே வைத்திருக்கவும்.
- தண்ணீர் வடித்த பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் பச்சை மிளகாய், வர மிளகாய், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
- அரைக்கும்போது மிகக் குறைந்த அளவே தண்ணீர் சேர்க்கவும். மேலும், பருப்பை மிகவும் நைசாக அரைக்காமல் சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- அரைப்பதற்கு முன், மாவில் சேர்க்க சிறிதளவு முழு பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அரைத்த மாவில் கறிவேப்பிலையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- மாவு தயாரானதும் வடையை பொரித்தெடுக்க தேவையான எண்ணெயை கடாயில் ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும், சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, உள்ளங்கையில் வைத்து உருண்டையாக அல்லாமல் சற்று தட்டையாகத் தட்டிக்கொள்ளவும்.
- பின்னர் இதே போல மீதமுள்ள மாவையும் தட்டி போட்டு இருபுறமும் நன்கு சிவக்கும் படி வறுத்தெடுக்கவும்.
- வெந்த வடையை எடுத்து, எண்ணெயை வடிகட்டி சூடாக பரிமாறவும்.



Click it and Unblock the Notifications