குழந்தை பிறப்பதைத் தடுக்க அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட மோசமான முறைகள் என்னென்ன தெரியுமா?

இப்போது குழந்தைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெரும்பாலானவர்களுக்கு இருந்தாலும், பழங்காலத்தில் அதிகளவு குழந்தைகளை பெற்றுக்கொள்வதை பெரும்பாலான பெற்றோர்கள் விரும்பவில்லை. துரதிர்ஷ்டவசமாக கடந்த காலத்தில் கருத்தடை முறைகள் அவ்வளவு பிரபலமானதாக இல்லை, மேலும் வழக்கத்தில் இருந்த கருத்தடை முறைகளும் மிகவும் விசித்திரமானதாக இருந்தது.

Weird Birth Control Methods Through History in Tamil

தற்போது சில வெளிப்படையான காரணங்களுக்காக குறிப்பிட்ட நேரத்தில் கர்ப்பத்தைத் தடுக்க, தம்பதிகள் சில மருத்துவ நுட்பங்களைத் தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள். இருப்பினும், பல தம்பதிகள் கர்ப்பத்தைத் தடுக்க வித்தியாசமான முறைத் தேர்வு செய்கிறார்கள். கர்ப்பத்தைத் தடுக்க மக்கள் பயன்படுத்திய சில விசித்திரமான வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

யோனி ஸ்டீமிங்

கடந்த காலத்தில் கர்ப்பத்தைப் பற்றிய அறிவு மக்களுக்கு மிகவும் குறைவாக இருந்தது மற்றும் கர்ப்பத்தைப் பற்றி மக்களுக்கு போதுமான தெளிவு இல்லாததால், கருத்தரிப்பைத் தவிர்க்க பல வித்தியாசமான முறைகள் கையாளப்பட்டன. அத்தகைய ஒரு வித்தியாசமான முறைதான் யோனி ஸ்டீமிங் ஆகும். சில மூலிகைகள் போட்டு வேகவைத்த பானையின் மீது பெண்கள் நிற்கவைப்பட்டனர். இந்த மூலிகை நீராவி பெண்களின் பிறப்புறுப்பிற்குள் சென்று கருத்தரிப்பதைத் தடுக்கும். அதிர்ஷ்டவசமாக இந்த வழக்கம் இப்போது உபயோகத்தில் இல்லை.

எலுமிச்சையை பயன்படுத்துதல்

கர்ப்பத்தைத் தடுக்க பெண்களின் பிறப்புறுப்பிற்குள் எலுமிச்சைத் துண்டுகள் அல்லது சாற்றை பயன்படுத்துவார்கள் என்றால் உங்கள் நம்ப முடியுமா? ஆனால் இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்தது. எலுமிச்சைச்சாற்றில் விந்தணுக்களை கொல்லும் சக்தி இருப்பதாக நம்பப்பட்டதால் கர்ப்பத்தை தடுக்க எலுமிச்சை பயன்படுத்தப்பட்டது.

ஈயம் மற்றும் பாதரசம்

பண்டைய காலங்களில் தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க ஈயம், பாதரசம் மற்றும் ஆர்சனிக் போன்ற ஆபத்தான பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. கருத்தரிப்பதைத் தடுக்க பெண்கள் இந்த நச்சு இரசாயனங்களின் கலவையை விழுங்க கட்டாயப்படுத்தப்பட்டனர்னர். ஆனால் இவை பெண்களுக்கு இவை சிறுநீரகம் மற்றும் நுரையீரல் செயலிழப்பிற்கு வழிவகுத்ததால் பிற்காலத்தில் இந்த முறை தடைசெய்யப்பட்டது.

ஆலிவ் எண்ணெய்

பழங்காலத்தில் மக்கள், சிடார் எண்ணெயுடன் கலந்த ஆலிவ் எண்ணெயை கர்ப்பத்தைத் தடுக்க பயன்படுத்தினர். இந்தக் கலவையானது விந்தணுக்களை கொல்லும் குணங்களைக் கொண்டிருப்பதாகவும், விந்தணுக்களின் இயக்கத்தைக் குறைக்கும் என்றும் பழங்கால மக்கள் நம்பினர்.

நெய் மற்றும் தேன்

பண்டைய காலத்தில் பெண்கள் வீட்டில் எளிதாக கிடைக்கும் சில பொருட்களை கர்ப்பத்தைத் தடுக்க பயன்படுத்தினர். பழங்காலத்தில் நெய், தேன் மற்றும் சில மர விதைகளை கலந்து பிறப்புறுப்பில் வைக்கப்பட்டது. மேலும் கல் உப்பையும் விந்தணுக் கொல்லியாக பயன்படுத்தினார்.

Story first published: Thursday, March 23, 2023, 19:40 [IST]
Desktop Bottom Promotion