Just In
- 2 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 7 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 10 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- Sports ஐபிஎல் 2024 - சிஎஸ்கே பிளே ஆப் வாய்ப்பு பாதிப்பு.. புள்ளி பட்டியலில் கீழே சரிந்தது
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சுகப்பிரசவம், சிசேரியன் பிரசவம் தெரியும்... அதென்ன தாமரை பிரசவம்? இத படிங்க புரியும்...
சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை பிரசவம், தண்ணீர் பிரசவம் என்னும் வகைகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தாமரை பிரசவம் குறித்து நீங்கள் அறிந்ததுண்டா?
கருவில் உள்ள குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிவருவதை நாம் பிரசவம் என்று கூறுகிறோம். பிரசவம் பல வகையில் நடந்தேறுகிறது. சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை பிரசவம், தண்ணீர் பிரசவம் என்னும் வகைகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தாமரை பிரசவம் குறித்து நீங்கள் அறிந்ததுண்டா?
தாமரை பிரசவத்திற்கான அடையாளங்கள் வரலாற்று காலங்களில் இருப்பதை நாம் கண்டறிய முடியும். இன்றும் உலகின் சில இடங்களில் இந்த முறையில் பிரசவம் நடந்து வருகிறது. தாமரை பிரசவம் என்றால் என்ன என்பது பற்றியும், அதன் நன்மை தீமைகள் குறித்தும் இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ளவோம்.
தாமரை பிரசவம் என்றால் என்ன?
குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை வெட்டாமல் அப்படியே குழந்தையுடன் இணைத்து வைப்பது தாமரை பிரசவமாகும். இது தானாக விழும்வரை குழந்தையை நஞ்சுக்கொடியுடன் பிணைக்கிறது. நஞ்சுக்கொடி குழந்தையுடன் இணைக்கப்பட்டு, தொப்புள் கொடியின் மீதமுள்ள பகுதி ஒரு முடிச்சாக கட்டப்பட்டுவிடும். 3-8 நாட்களுக்குள் இந்த கொடி தானாக விழுந்துவிடும். பிரசவத்தில் குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை வெட்டி எடுத்துவிடுவது பொதுவான பழக்கமாகும். ஆனால் தாமரை பிரசவத்தில் தொப்புள்கொடி வெட்டப்படாமல் அப்படியே வைக்கப்படுவதால் இந்த வகையில் மற்ற பிரசவத்தைக் காட்டிலும் இது வேறுபடுகிறது.
தாமரை பிரசவத்தில் இருக்கும் நன்மைகள்:
இரத்த ஓட்டம்
குழந்தை பிறந்த அடுத்த சில நாட்களுக்கு தொப்புள்கொடியை வெட்டாமல் இருப்பதால் குழந்தையின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இயற்கையாகவே இந்த கொடி விழுவதற்கான வழியாகவும் இது உள்ளது.
ஹீமோகுளோபின் அளவில் அதிகரிப்பு
தாமரை பிரசவத்தில் நஞ்சுக்கொடியில் அமைந்துள்ள சிவப்பு இரத்த அணுக்கள், இரும்பு மற்றும் ஊட்டச்சத்துகள், குழந்தையின் உடலுக்குள் மாற்றம் செய்யப்படுகிறது. தொப்புள்கொடி தாமதமாக கீழே விழுவதால் தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல்களை குழந்தையின் உடல் உறிஞ்சுகிறது.
குழந்தைக்கு உளவியல் ரீதியிலான அதிர்ச்சி குறைகிறது
பிரசவம் மூலமாக குழந்தை முதன்முதலாக இந்த உலகை பார்க்கிறது. குழந்தையுடன் தொப்புள்கொடி இணைக்கப்பட்டிருப்பதால் தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்த பின்னும் குழந்தைக்கு ஒரு சௌகரியமான உணர்வு கிடைக்கிறது. மற்ற பிரசவங்களில் குழந்தைக்கு உண்டாகும் அதிர்ச்சி மற்றும் பயம், தாமரை பிரசவத்தில் குறைவதாக நம்பப்படுகிறது.
தாமரை பிரசவத்தில் இருக்கும் தீமைகள்:
தொற்று பாதிப்பிற்கான அபாயம்
பிரசவத்திற்கு பிறகு தொப்புள்கொடி என்பது அடிப்படையில் ஒரு இறந்த உறுப்பாக மாறுகிறது. மேலும் அது அழுகத் தொடங்கிவிடுகிறது. இதிலிருந்து ஒருவித துர்நாற்றம் வெளிவரலாம், மற்றும் இதன் மூலமாக தொற்று பாதிப்பிற்கான அபாயமும் அதிகரிக்கலாம்.
அடிக்கடி சரியான முறையில் சுத்தம் செய்வது அவசியம்
பிறந்த குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் மென்மையானது மற்றும் அதிக உணர்திறன் கொண்டது. ஒரு இறந்த உறுப்பு எந்த நேரத்திலும் குழந்தைக்கு விஷமாக மாறலாம். அதனால் நஞ்சுக்கொடி சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்வதற்காக ஒரு நாளில் பல முறை அதனை கிருமிநீக்கம் செய்வது மிகவும் அவசியமாகும்.
குழந்தைப்பேறுக்கான மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று தாமரை பிரசவ முறையை நீங்கள் முயற்சிக்கலாம். இதன் நன்மை மற்றும் தீமைகளை கணக்கில் கொண்டு மருத்துவரின் வழிகாட்டுதல் படி பிரசவத்தில் எந்த வழிமுறையை தேர்வு செய்வது என்பதை நீங்கள் முடிவெடுக்கலாம்.