Just In
- 59 min ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- 1 hr ago கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- 2 hrs ago இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- 2 hrs ago கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
Don't Miss
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Movies அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்.. செம ட்விஸ்ட்!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கருவில் இருக்கும் சிசு என்னென்ன சேட்டைகள் செய்யும் தெரியுமா?
கர்ப்ப காலத்தில் குழந்தை தாயின் கருவறைக்குள் என்னென்ன சேஷ்டைகள் செய்யும் என்பது பற்றி இங்கே கண்டபிடித்து கொடுக்கப்பட்டுள்ளது.
கருவறைக்குள் குழந்தைகள் செய்யும் விஷயங்கள்
குழந்தைகள் என்றாலே அழகு தான். அவர்களுடைய சிரிப்பு, அழுகை, முக பாவனைகள், கொட்டாவி விடுதல் உறங்குவது என் அத்தனையுமே ஒருவித அழகு தான். ஆனால் கருவறைக்குள் இவற்றில் என்னென்ன செயல்களையெல்லாம் குழந்தைகள் செய்யும் உங்களுக்கு தெரியுமா?
நாம் மேற்கூறிய பல விஷயங்களைக் குழந்தை கருவறைக்குள்ளேயே செய்ய ஆரம்பித்துவிடம். இனிப்பு ஃப்ளூயிட்களை குழந்தைகள் கருவிலேயே ரசித்து விழுங்கும். அம்மாவின் குரலைக் கேட்டு அசைவது என கருவறைக்குள் குழந்தைகள் செய்யும் லூட்டிகள் இன்னும் நிறைய.
அழுகை
கருவில் இருக்கும் குழந்தை என்ன செய்கிறது என்பதை அறிய அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம் ஆய்வு செய்து பார்த்த பொழுது, நம்மை ஆச்சர்யப்படுத்தும் வகையில் குழந்தை கருவில் அழுது கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
பிணைப்பு
இரட்டைக் குழந்தைகளுக்கு இடையே எப்போதுமே நெருக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இவர்களுக்கு இடையே இருக்கின்ற இந்த பிணைப்பு என்பது கருவறைக்குள்ளேயே தொடங்கிவிடுகிறது. இரட்டையர்கள் கடைசி பத்து வாரங்களில் அம்மா பேசுவதை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும்.
விக்கல்
முதல் மூன்று மாதத்தின் பொழுதிலிருந்தே குழந்தைககு விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடும். இதை கர்ப்பிணிகளால் உணர்ந்த கொள்ள முடியாது. நன்கு கூர்ந்து கவனித்தால் சின்ன சின்ன நகர்வுகளை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.மற்றபடி இவற்றை அல்ட்ரா சவுண்ட் கருவியின் மூலம் தான் பார்க்க முடியும்.
புன்னகை
குழந்தை கருவறைக்குள் இருக்கும் 26 வது வாரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரியாக்ட் செய்துவிட ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில் தான் கருவறைக்குள் இருக்கும் முதன்முதலில் சிரிக்கவே ஆரம்பிக்கும்.
கொட்டாவி
குழந்தைகள் கொட்டாவி விட்டாலே மிக அழகாக இருக்கும். அதிலும் குழந்தை அம்மாவின் கருவறைக்குள் இருக்கும் பொழுது, அழகாக கொட்டாவி விட்டால் எப்படி இருக்கும்?... எவ்வளவு அழகாக இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து ரசித்துப் பாருங்கள்.
சிறுநீர்
வயிற்றில் கரு உற்பத்தியாகி, மூன்று மாதங்கள் ஆன பின்பு குழந்தைக்கு சிறுநீர் உற்பத்தி ஆக ஆரம்பித்துவிடும். அதன்பின் வயிற்றுக்குள் கருவறைக்குள்ளேயே குழந்தை சிறுநீர் கழிக்க ஆரம்பித்து விடுகிறது.
கண்களைத் திறப்பது
வயிற்றுக்குள் கரு தோன்றி, 28 வது வாரத்தில் தான் குழந்தை முதன் முதலாகக் கண்களைத் திறக்க ஆரம்பிக்கும். கர்ப்பிணியின் வயிற்றுப் பகுதி அதிக வெளிச்சத்தில் படுகிற பொழுதுதான் முதன் முதலாக குழந்தை கண்ணைத் திறக்க ஆரம்பிக்குமாம். சிறிது நேரம் மட்டும் தான் கண் திறந்திருக்குமாம். இதுபோன்ற அதிக வெளிச்சத்தை உணருகின்ற போதெல்லாம் சிசு கண் திறந்து மூடுமாம்.
ருசி (சுவை)
கர்ப்பிணி பெண்கள் எந்த உணவை உட்கொண்டாலும் அந்த சுவையை அம்னியோடிக் அமிலத்தின் மூலமாக சிசு சுவையை உணர்ந்து கொள்ளுமாம். இதைப் பற்றி நிபுணர்கள் கருத்து சொல்லுகிற போது, இதன்மூலம் பல இனிப்பு ஃபுளூயிட்டுகளை ருசித்து விழுங்குகிறது என்று குறிப்பிடுகின்றனர்.