Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
கருப்பையில் குழந்தை இறந்துவிட்டது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று கருப்பையில் வளரும் குழந்தை இறப்பது. இந்நிலை மிகவும் அரிது என்றாலும், இன்றைய கால பெண்களுக்கு இம்மாதிரி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இது மிகவும் கொடுமையானது.
கருச்சிதைவு என்பது 24 வாரத்திற்கு முன் கரு கலைவது. ஆனால் 24 வாரங்களுக்கு பின் இறக்கும் குழந்தை கருப்பையிலேயே தான் இருக்கும். இப்படி இருந்தால், அதனைக் கண்டறிவது மிகவும் கடினம். எனவே தான் மாதந்தோறும் மருத்துவரை சந்தித்து குழந்தையின் வளர்ச்சியை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
இங்கு 24 வாரத்திற்கு பின் குழந்தை இறப்பதற்கான காரணங்கள், குழந்தை இறந்திருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் மற்றும் இந்நிலையைத் தவிர்ப்பதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

காரணம் 1
குடும்பத்தில் யாருக்கேனும் 24 வார குழந்தை இறந்திருப்பதும், விபத்துக்கள், குழந்தையின் மோசமான வளர்ச்சி, நோய்த்தொற்றுக்கள் மற்றும் தொப்புள் கொடியில் முடிச்சு விழுந்து குழந்தைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவது போன்றவை 24 வார குழந்தை இறப்பதற்கான காரணங்களுள் ஒன்று.

காரணம் 2
மற்றொன்று கர்ப்பிணிகளுக்கு புகைப்பிடிப்பது, மது அருந்துவது மற்றும் வேறு போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தாலும், இந்நிலை ஏற்படும்.

காரணம் 3
40 வயதிற்கு மேல் கருத்தரிப்பது, IVF முறையைக் கையாள்வது போன்றவைகளும் 24 வார சிசு இறப்பதற்கான காரணங்களுள் ஒன்று.

அறிகுறி 1
வயிற்றில் வளரும் குழந்தை இறந்திருந்தால், அதற்கான அறிகுறி சரியாக தெரியாது. ஆனால் கர்ப்பிணிகள் எப்போதும் கர்ப்ப காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் 24 வாரம் கழித்து அடிவயிற்றில் தாங்க முடியாத வலியுடன், இரத்தப்போக்கு ஏற்பட்டால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

அறிகுறி 2
28 வாரத்தில் வயிற்றில் வளரும் குழந்தை உதைக்க ஆரம்பிக்கும். அந்த உணர்வை ஒவ்வொரு தாயும் அனுபவிப்பார்கள். ஆனால் உங்களுக்கு குழந்தையின் உதை எதுவும் தெரியாமல் இருந்தால், உடனே மருத்துவரைக் காணுங்கள்.

அறிகுறி 3
முக்கியமாக அடிவயிற்றுப் பகுதி மிகவும் மென்மையாக தெரிய ஆரம்பித்தால், சற்றும் நேரத்தை வீணாக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும். ஏனெனில் இதுவும் கருப்பையில் உள்ள குழந்தை இறந்துவிட்டது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

டிப்ஸ் 1
கர்ப்பிணிகள் தினமும் தவறாமல் மருத்துவர் பரிந்துரைத்த அளவில் ஃபோலிக் அமிலத்தை எடுக்க வேண்டியது அவசியம்.

டிப்ஸ் 2
சாப்பிட முடியவில்லை என்று கர்ப்பிணிகள் சாப்பிடாமல் இருக்கக்கூடாது. மேலும் கண்ட உணவுகளை உண்ணக்கூடாது. தினமும் சரிவிகித உணவுகளுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

டிப்ஸ் 3
கர்ப்ப காலத்தில் எக்காரணம் கொண்டும் புகைப்பிடிக்கும் இடத்தில் இருக்காதீர்கள். ஏனெனில் அந்த புகையை கர்ப்பிணிகள் சுவாசித்தால், அது குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

டிப்ஸ் 4
கர்ப்ப காலத்தில் உடல் எடை மிகவும் முக்கியமானது. உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். இப்படி பராமரித்தால், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.



Click it and Unblock the Notifications











