Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
'அன்னாசி' கர்ப்பிணிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பழம்!
அன்னாசி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அதன் புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவை மற்றும் அதன் மணம் தான். இந்த அன்னாசியில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்திருப்பதால், இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. அதிலும் அன்னாசிப்பழமானது பெண்களுக்கு இறுதி மாதவிடாயின் போது மிகவும் நல்லது.
மேலும் அன்னாசிப்பழமானது நீர்ச்சத்து அதிகம் கொண்டதால், இது கோடையில் அதிகம் கிடைக்கிறது. என்ன தான் இதில் சத்துக்கள் அதிகம் நிறைந்திருந்தாலும், இதனை கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும்.

சரி, இப்போது அன்னாசிப்பழம் ஏன் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமற்றது என்று பார்ப்போம்.
* அன்னாசிப்பழத்தில் கனிமச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. இந்த பழம் தொண்டையில் உள்ள புண்களை குணமாக்குவதோடு, வயிற்றில் ஏதேனும் தொற்றுகள் இருந்தாலும் அழித்துவிடும். ஆனால் இதனை கர்ப்பிணிகள் உட்கொண்டால், அதில் நிறைந்துள்ள அசிடிக் அமிலமானது சிசுவிற்கு அழிவை ஏற்படுத்தும்.
* கர்ப்பிணி பெண்கள் அன்னாசியை கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் உட்கொண்டால், அது கருப்பையை சுருக்கி, சிசுவின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தி ஏற்படுத்தும். அன்னாசியைப் போல் பப்பாளியும் கருப்பையை சுருக்கி சிசுவிற்கு ஆபத்தை விளைவிக்கும். என்ன தான் பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சலை சரிசெய்தாலும், கர்ப்பிணிகளுக்கு ஆபத்தானதே ஆகும்.
* ஆய்வு ஒன்றில் அன்னாசியில் உள்ள புரொமிலியன், கருப்பை வாயை மென்மையாக்கி, வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* சில கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப் பழத்தால் எவ்வித ஆபத்தும் நேர்ந்ததில்லை. இருப்பினும் சில மருத்துவர்கள், அன்னாசிப்பழமானது கர்ப்பிணிகளின் பிரசவ வலியைத் தூண்டும் என்று சொல்கின்றனர். என்ன தான் இருந்தாலும், கர்ப்பிணிகள் இதனை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின் எடுத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications