Latest Updates
-
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
'அன்னாசி' கர்ப்பிணிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பழம்!
அன்னாசி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அதன் புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவை மற்றும் அதன் மணம் தான். இந்த அன்னாசியில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்திருப்பதால், இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. அதிலும் அன்னாசிப்பழமானது பெண்களுக்கு இறுதி மாதவிடாயின் போது மிகவும் நல்லது.
மேலும் அன்னாசிப்பழமானது நீர்ச்சத்து அதிகம் கொண்டதால், இது கோடையில் அதிகம் கிடைக்கிறது. என்ன தான் இதில் சத்துக்கள் அதிகம் நிறைந்திருந்தாலும், இதனை கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும்.

சரி, இப்போது அன்னாசிப்பழம் ஏன் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமற்றது என்று பார்ப்போம்.
* அன்னாசிப்பழத்தில் கனிமச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. இந்த பழம் தொண்டையில் உள்ள புண்களை குணமாக்குவதோடு, வயிற்றில் ஏதேனும் தொற்றுகள் இருந்தாலும் அழித்துவிடும். ஆனால் இதனை கர்ப்பிணிகள் உட்கொண்டால், அதில் நிறைந்துள்ள அசிடிக் அமிலமானது சிசுவிற்கு அழிவை ஏற்படுத்தும்.
* கர்ப்பிணி பெண்கள் அன்னாசியை கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் உட்கொண்டால், அது கருப்பையை சுருக்கி, சிசுவின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தி ஏற்படுத்தும். அன்னாசியைப் போல் பப்பாளியும் கருப்பையை சுருக்கி சிசுவிற்கு ஆபத்தை விளைவிக்கும். என்ன தான் பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சலை சரிசெய்தாலும், கர்ப்பிணிகளுக்கு ஆபத்தானதே ஆகும்.
* ஆய்வு ஒன்றில் அன்னாசியில் உள்ள புரொமிலியன், கருப்பை வாயை மென்மையாக்கி, வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* சில கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப் பழத்தால் எவ்வித ஆபத்தும் நேர்ந்ததில்லை. இருப்பினும் சில மருத்துவர்கள், அன்னாசிப்பழமானது கர்ப்பிணிகளின் பிரசவ வலியைத் தூண்டும் என்று சொல்கின்றனர். என்ன தான் இருந்தாலும், கர்ப்பிணிகள் இதனை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின் எடுத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications