Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
'அன்னாசி' கர்ப்பிணிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பழம்!
அன்னாசி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அதன் புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவை மற்றும் அதன் மணம் தான். இந்த அன்னாசியில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்திருப்பதால், இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. அதிலும் அன்னாசிப்பழமானது பெண்களுக்கு இறுதி மாதவிடாயின் போது மிகவும் நல்லது.
மேலும் அன்னாசிப்பழமானது நீர்ச்சத்து அதிகம் கொண்டதால், இது கோடையில் அதிகம் கிடைக்கிறது. என்ன தான் இதில் சத்துக்கள் அதிகம் நிறைந்திருந்தாலும், இதனை கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும்.

சரி, இப்போது அன்னாசிப்பழம் ஏன் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமற்றது என்று பார்ப்போம்.
* அன்னாசிப்பழத்தில் கனிமச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. இந்த பழம் தொண்டையில் உள்ள புண்களை குணமாக்குவதோடு, வயிற்றில் ஏதேனும் தொற்றுகள் இருந்தாலும் அழித்துவிடும். ஆனால் இதனை கர்ப்பிணிகள் உட்கொண்டால், அதில் நிறைந்துள்ள அசிடிக் அமிலமானது சிசுவிற்கு அழிவை ஏற்படுத்தும்.
* கர்ப்பிணி பெண்கள் அன்னாசியை கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் உட்கொண்டால், அது கருப்பையை சுருக்கி, சிசுவின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தி ஏற்படுத்தும். அன்னாசியைப் போல் பப்பாளியும் கருப்பையை சுருக்கி சிசுவிற்கு ஆபத்தை விளைவிக்கும். என்ன தான் பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சலை சரிசெய்தாலும், கர்ப்பிணிகளுக்கு ஆபத்தானதே ஆகும்.
* ஆய்வு ஒன்றில் அன்னாசியில் உள்ள புரொமிலியன், கருப்பை வாயை மென்மையாக்கி, வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* சில கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப் பழத்தால் எவ்வித ஆபத்தும் நேர்ந்ததில்லை. இருப்பினும் சில மருத்துவர்கள், அன்னாசிப்பழமானது கர்ப்பிணிகளின் பிரசவ வலியைத் தூண்டும் என்று சொல்கின்றனர். என்ன தான் இருந்தாலும், கர்ப்பிணிகள் இதனை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின் எடுத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications