Just In
- 47 min ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- 2 hrs ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 3 hrs ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 3 hrs ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
Don't Miss
- News இலங்கையில் ரூ7,500 கோடி மதிப்பிலான 802 கிலோ எடை ரத்தினக் கல்- உலகிலேயே மிகப் பெரியது!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
பிரசவ வலி நீண்ட நேரம் நிலைத்திருப்பதற்கான காரணங்கள்!!!
பிரசவம் என்பது பெண்ணாணவள் தன் உயிரையே கொடுத்து அழகான ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு அற்புதமான தருணம். வெற்றிகரமான பிரசவம் என்பது பெண்களுக்கு மறுஜென்மம் போன்றது. பிரசவம் என்பது அவ்வளவு ஈஸியானது இல்லை. இத்தகைய பிரசவமானது நடைபெறும் போது பெண்கள் கடுமையான வலியை சந்திக்கக்கூடும். சாதாரணமாக முதல் பிரசவத்தை சந்திப்போருக்கு பிரசவ வலியானது 6-10 மணிநேரம் இருக்கும்.
ஆனால் சிலருக்கோ 10 மணிநேரத்திற்கும் மேலாக பிரசவ வலியானது இருக்கும். இப்படி அதிக நேரம் நீடிக்கும் போது, பல முயற்சிகளை எடுத்தும் சுகப்பிரசவம் நடைபெறாவிட்டால், மருத்துவர்கள் சிசேரியன் செய்யலாம் என்று சொல்வார்கள். இப்படி பிரசவ வலியானது நீண்ட நேரம் இருப்பதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் என்னவென்று கர்ப்பிணிகள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஏனெனில் இக்காலத்தில் கர்ப்பிணிகள் அதிகமாக வீட்டு வேலைகளை செய்யாததால், பெண்கள் பிரசவ காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எனவே பிரசவ காலத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் குழந்தை பிறக்க வேண்டுமானால், கர்ப்பிணிகள் எப்போதும் போல வீட்டு வேலைகளை செய்து கொண்டு, சரியான ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, அதே சமயம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சரி, இப்போது பிரசவ வலி நீண்ட நேரம் நிலைத்திருப்பதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
பலவீனமான சுருக்கம்
கருப்பை சுருக்கமானது பலவீனமாக இருந்தால், பிரசவ வலியானது நீண்ட நேரம் இழுக்கும். இந்த நேரத்தில் மருத்துவர்கள் கருப்பையை சுருக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
சிறுநீர்ப்பை நிரம்பியிருப்பது
சிறுநீர்ப்பையானது நிரம்பியிருந்தால், கருப்பையானது சுருக்கமடைவதில் இடையூறு ஏற்படும். எனவே பிரசவம் நெருங்கும் போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும்.
தவறான நிலை
தூங்கும் நிலையானது தவறாக இருந்தால், அதாவது எப்போதும் நேராக தூங்கினால், பிரசவமானது தாமதமாகும். எனவே தூங்கும் போது இடதுபுறம் தூங்குவதுடன், அடிக்கடி நடைப்பயிற்சி, ஸ்குவாட் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வர வேண்டும்.
குழந்தையின் தலை மேலே இருப்பது
பொதுவாக குழந்தையானது ஆரம்ப காலத்தில் நேராக இருக்கும். பிரசவம் நெருங்க நெருங்க, குழந்தை தலைகீழாக கருப்பை வாய்க்கு அருகில் குழந்தையின் தலையானது இருக்கும். ஆனால் சிலருக்கு பிரசவ காலத்தின் போது குழந்தை நேராக இருந்தால், குழந்தை தலைகீழாக வரும் வரை பிரசவ வலியானது நீடிக்கும்.
குறுகிய கருப்பை வாய்
சில பெண்களுக்கு கருப்பை வாயானது குறுகிய நிலையில், குழந்தை வெளியே வர முடியாத அளவில் இருக்கும். அந்த நிலையில் பிரசவ வலியானது நீடிப்பதுடன், சிசேரியன் செய்யும் நிலையும் இருக்கும்.
பனிக்குட நீர் வெளியேறாமை
கருப்பையில் உள்ள பனிக்குட நீரானது வெளியேறிவிட்டால், விரைவில் கருப்பையானது சுருங்கி, விரைவில் பிரசவம் நடைபெறும். ஆனால் 3-4 மணிநேரம் பிரசவ வலியை சந்தித்தப் பின்னரும், பனிக்குட நீர் வெளியேறாவிட்டால், நீண்ட நேரம் பிரசவ வலியை சந்திக்கக்கூடும்.
குழந்தை திரும்பியிருப்பது
சில நேரங்களில் குழந்தை சரியான நிலையில் இருந்து திரும்பிவிடும். அப்படி குழந்தை திரும்பியிருந்தால், பிரசவம் கஷ்டமானதாக இருப்பதுடன், தாமதமாகவும் நடைபெறும்.