Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
பெரியவங்க துணையில்லையா ? கர்ப்பகாலத்தில் கவனிங்க

சத்தான உணவு கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவுகளை கொடுக்கவேண்டும். அவர்களுக்கு தானியவகைகள், முட்டை, இறைச்சி,பால்,பழவகைகள்,காய்கறி வகைகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் உண்ண வேண்டும். கர்ப்ப காலத்தில் பரிசோதனைக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து நிவர்த்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது. எனவே சரியான நேரத்திற்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்லவும்.
சரியான மாத்திரைகள்
நீங்கள் கர்ப்பம் தரிக்க தீர்மானிக்கும் ஆரம்பத்திலிருந்து கர்ப்பம் தரித்த 12வாரங்கள் வரை போலிக் அமில மாத்திரையை தினமும் தவறாமல் எடுக்க வேண்டும். ஏனெனில் முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்கவும், மூளை வளர்ச்சிக்கும் போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் பரிந்துரை செய்கின்றனர். கீரை வகைகள், புரக்கோழி, தானியங்கள் தானியங்கள் உள்ளிட்டவை போலிக் அமிலம் நிறைந்தவையாகும். அவற்றை கர்ப்பிணிகளுக்கு வாங்கி கொடுக்கலாம். அதே சமயம் மருத்துவரின் ஆலோசனையின்றி கர்ப்பிணிகள் கடைகளில் கண்ட மருந்துகள் வாங்கி உட்கொள்ளக் கூடாது.
கண்டதை சாப்பிடாதீங்க
மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள், நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, சரியாக வேகாத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். வைட்டமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கலாம்.
ஒட்டுண்ணி நோய்கள்
டோக்சோ பிளாஸ்மோசிஸ்என்பது கர்ப்ப காலங்களில் ஒட்டுண்ணியால் ஏற்படகூடிய ஒரு வகை நோய்.இந்நோய் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும்போது குழந்தைகளுக்கு தோல் சம்பந்தமான நோய்களைத் தோற்றுவிக்கும். எனவே அனைத்து விதமான உணவுகளை உண்ணும் போதும் நன்கு கழுகி,வேகவைத்த உணவுகளையே உட்கொள்ளுங்கள்.
ஓய்வெடுப்பது அவசியம்
கர்ப்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் எளிதாக சுகப்பிரசவத்திற்கும் உதவும்.
மருத்துவரை அணுகவேண்டும்
உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், பிறப்புறுப்பில் ரத்தம் அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரை அணுகவும். பெரியவரின் துணை இல்லாதவர்களுக்கு பிரசவ காலம் சற்று சிரமமானதுதான். எனவே மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் சிக்கலின்றி குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications