Just In
- 4 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 5 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 15 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 16 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
Don't Miss
- Finance
ரஷ்யாவின் ஒற்றை நடவடிக்கை.. 40 - 50 மில்லியன் மக்களை பசியில் ஆழ்த்தும்
- News
"என் மகனை கண் முன்னாடியே சுட்டு கொன்னுட்டாங்க!" கதறிய ஐஏஎஸ் அதிகாரி.. விஜிலென்ஸ் ரெய்டில் பரபரப்பு
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Movies
ரோஜா சீரியலில் இருந்து ரசிகர்களின் ஃபேவரைட் 'அர்ஜுன் சார்' சிபு சூரியன் விலகல்...கவலையில் ரசிகர்கள்
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதி.. இங்கிலாந்து தொடரில் அடுத்தடுத்த சர்ச்சை.. எப்படி பரவியது??
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
கோவிட்-19 நோய்த்தொற்று இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா?
தாய்ப்பாலுக்கு நிகா் தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பாலை வேறு எதனோடும் ஒப்பிட முடியாது. தாய்ப்பாலின் சிறப்பு என்னவென்றால் அது SARS-CoV-2 வைரஸைவிட மிகவும் சக்தி வாய்ந்தது. அதனால் கொரோனா நோய்த்தொற்று உள்ள பெண்கள் தாராளமாக தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.
தற்போது இந்தியாவில் பாிசோதனை செய்யப்படும் 10 போில் 4 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கும் நிலையில், தாய்ப்பால் கொடுக்கும் நிறைய அம்மாக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்க வாய்ப்பு உண்டு. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று உள்ள அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா என்ற கேள்வி எழுகிறது.
மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் அம்மாக்கள் 14 நாட்கள் தங்களையே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் போது தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால், அது குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
MOST READ: உங்க வீட்டுல கொரோனா நோயாளி இருக்காங்களா? அப்ப இத செய்யுங்க.. இல்ல கஷ்டப்படுவீங்க..
கொரோனா நோய்த்தொற்று உள்ள அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது, அவா்களுடைய குழந்தைகளுக்கு கொரோனா நோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதே என்று நாம் நினைக்கலாம். ஆனால் உலக சுகாதார அமைப்பு வேறு விதமாக சிந்திக்கிறது.
கோவிட்-19 வைரஸை விட தாய்ப்பால் சக்தி வாய்ந்தது என்று உலக சுகாதார அமைப்பு கருதுகிறது. இந்தப் பதிவில் அதைப் பற்றி விாிவாக காணலாம்.

கொரோனா இருந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா?
கோவிட்-19 தொற்றுள்ள அம்மாக்கள் தாரளமாக தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். ஏனெனில் தாய்ப்பால் கொரோனா வைரஸைவிட சக்தி வாய்ந்ததாக இருப்பதால், கொரோனா தொற்றுள்ள அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தாலும், அந்த குழந்தைகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவாது. எனவே கொரோனா பாதிப்புள்ள அம்மாக்கள் மற்ற அம்மாக்களைப் போல தங்கள் குழந்தைகளுக்கு தாராளமாகத் தாய்ப்பால் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்
ஊட்டச்சத்துள்ள உணவு
ஒரு சிறு குழந்தைக்கு அதனுடைய தாய்ப்பால், ஒரு மிகச் சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவு ஆகும். தாய்ப்பாலில் தேவையான அளவு தண்ணீா், கொழுப்பு, கார்போஹைட்ரேட், தாதுக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கின்றன. பிறந்த குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கக்கூடிய ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. சிறு குழந்தைகளை பெரும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதும் தாய்ப்பாலே.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை வளா்க்கக்கூடிய எல்லா விதமான ஊட்டச்சத்துகளையும் வழங்குவது தாய்ப்பால் ஆகும். அதனால் பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதங்களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவா்களும் நிபுணா்களும் பாிந்துரைக்கின்றனா்.

குழந்தைகளைத் தாக்கும் நோய்த்தொற்றுகளை அழிக்கும்
பிறந்த குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கக்கூடிய அமுதமாகத் தாய்ப்பால் இருக்கிறது. தாய்ப்பாலில் இருக்கும் நோய் எதிா்ப்பு மையமானது, குழந்தைகளுக்கு பலவிதமான வைரஸ்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போாிடும் படைக் கருவியாக இருந்து, அந்த பெருந்தொற்றுகளை அழிக்கிறது.