Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
கோவிட்-19 நோய்த்தொற்று இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா?
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் அம்மாக்கள் 14 நாட்கள் தங்களையே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் போது தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால், அது குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
தாய்ப்பாலுக்கு நிகா் தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பாலை வேறு எதனோடும் ஒப்பிட முடியாது. தாய்ப்பாலின் சிறப்பு என்னவென்றால் அது SARS-CoV-2 வைரஸைவிட மிகவும் சக்தி வாய்ந்தது. அதனால் கொரோனா நோய்த்தொற்று உள்ள பெண்கள் தாராளமாக தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.
தற்போது இந்தியாவில் பாிசோதனை செய்யப்படும் 10 போில் 4 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கும் நிலையில், தாய்ப்பால் கொடுக்கும் நிறைய அம்மாக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்க வாய்ப்பு உண்டு. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று உள்ள அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா என்ற கேள்வி எழுகிறது.

மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் அம்மாக்கள் 14 நாட்கள் தங்களையே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் போது தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால், அது குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
கொரோனா நோய்த்தொற்று உள்ள அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது, அவா்களுடைய குழந்தைகளுக்கு கொரோனா நோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதே என்று நாம் நினைக்கலாம். ஆனால் உலக சுகாதார அமைப்பு வேறு விதமாக சிந்திக்கிறது.
கோவிட்-19 வைரஸை விட தாய்ப்பால் சக்தி வாய்ந்தது என்று உலக சுகாதார அமைப்பு கருதுகிறது. இந்தப் பதிவில் அதைப் பற்றி விாிவாக காணலாம்.

கொரோனா இருந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா?
கோவிட்-19 தொற்றுள்ள அம்மாக்கள் தாரளமாக தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். ஏனெனில் தாய்ப்பால் கொரோனா வைரஸைவிட சக்தி வாய்ந்ததாக இருப்பதால், கொரோனா தொற்றுள்ள அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தாலும், அந்த குழந்தைகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவாது. எனவே கொரோனா பாதிப்புள்ள அம்மாக்கள் மற்ற அம்மாக்களைப் போல தங்கள் குழந்தைகளுக்கு தாராளமாகத் தாய்ப்பால் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்
ஊட்டச்சத்துள்ள உணவு
ஒரு சிறு குழந்தைக்கு அதனுடைய தாய்ப்பால், ஒரு மிகச் சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவு ஆகும். தாய்ப்பாலில் தேவையான அளவு தண்ணீா், கொழுப்பு, கார்போஹைட்ரேட், தாதுக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கின்றன. பிறந்த குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கக்கூடிய ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. சிறு குழந்தைகளை பெரும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதும் தாய்ப்பாலே.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை வளா்க்கக்கூடிய எல்லா விதமான ஊட்டச்சத்துகளையும் வழங்குவது தாய்ப்பால் ஆகும். அதனால் பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதங்களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவா்களும் நிபுணா்களும் பாிந்துரைக்கின்றனா்.

குழந்தைகளைத் தாக்கும் நோய்த்தொற்றுகளை அழிக்கும்
பிறந்த குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கக்கூடிய அமுதமாகத் தாய்ப்பால் இருக்கிறது. தாய்ப்பாலில் இருக்கும் நோய் எதிா்ப்பு மையமானது, குழந்தைகளுக்கு பலவிதமான வைரஸ்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போாிடும் படைக் கருவியாக இருந்து, அந்த பெருந்தொற்றுகளை அழிக்கிறது.



Click it and Unblock the Notifications