Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
தாய்ப்பால் தரும் பெண்கள் குளிர்பானங்கள் குடிக்கலாமா?
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குளிர்பானங்கள் பருகுவது நல்லதா என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பெண்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டில் உள்ள பெரியவர்கள் பால் கொடுக்கும் பெண்களுக்கு சில அறிவுரைகளை வழங்குவார்கள். அவை எல்லாம் அர்த்தம் இல்லாத மூட நம்பிக்கை என நீங்கள் நினைக்க வேண்டாம்.
பெரியவர்கள் கூறும் ஒவ்வொரு விஷயத்தின் பின்னணியிலும் ஒரு வலுவான காரணம் இருக்க தான் செய்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டாம் என்றும், குளிர்ச்சியான நீரை பருக வேண்டாம் என்றும் பெரியவர்கள் கூறுவார்கள். இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் பின்னணியை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

1. தாய்க்கு சளி பிடிக்கும்
குழந்தை பிறந்த கொஞ்ச நாட்களுக்கு தாயின் உடல் சற்று ஆரோக்கியமில்லாமல் இருக்கும். இதனால் அவர்கள் குளிர்ந்த நீரில் குளித்தாலோ, குளிர்பானங்கள் அல்லது குளிர்ந்த நீரை பருகினாலோ அவர்களுக்கு சளி பிடிக்க கூடும்.

2. குழந்தைக்கும் ஆபத்து
தாய்க்கு சளி பிடித்திருந்தாலும் கூட, தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு சளி பிடிப்பதில்லை. ஏனெனில் வைரஸ் தொற்றுகள் தாய்ப்பாலை பாதிப்பதில்லை. ஆனால், தாயின் உடலில் இருந்து வெளியேறும் சளி அல்லது நீர்மங்கள் குழந்தையின் மீதுப்பட்டால் குழந்தைக்கும் சளி பிடிக்கிறது. தாய்க்கு சளியின் அறிகுறி தெரியும் முன்னரே குழந்தைக்கு சீக்கிரமாக சளி பிடித்துவிடும்.

3. பாலை மாற்றுவதில்லை
குளிர்ச்சியான பானங்களை குடிப்பது பாலின் தன்மையை மாற்றுவதில்லை. ஆனால் அதிகமாக ஐஸ் சேர்த்து குடிப்பதை நிறுத்திவிட்டு, அதிகளவில் நீர்மங்களை பருகுவது சிறந்தது. இது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு உதவும்.

4. சத்தான உணவு
பாலூட்டும் தாய்மார்கள் அதிகளவு புரோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதுமட்டுமின்றி நீங்கள் வழக்கமாக சாப்பிடுவதை விட பாலூட்டும் போது 400 கலோரிகள் அதிகமாக சாப்பிட வேண்டியது அவசியம்.

5. குளிர்பானங்கள் பருக கூடாதா?
உங்களுக்கு குளிர்பானங்களை பருக பிடித்தால், பிரஷ் ஜீஸில் ஐஸ் போட்டு, கோடைகால மதிய வேளைகளில் பருகுங்கள். இதனால் உங்களுக்கும் குழந்தைக்கும் எந்தவித பாதிப்பும் உண்டாகாது.



Click it and Unblock the Notifications