Just In
- 6 min ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- 1 hr ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 4 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 9 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
Don't Miss
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Movies தமன்னா அதற்கு செட் ஆகமாட்டார்.. ஓபனாக பேசிய இயக்குநர் லிங்குசாமி
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெற்றோர்களே! உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா..நீங்க உங்க குழந்தைங்க வாழ்க்கையை கெடுக்கிறீங்களாம்!
இந்த பெற்றோர்கள் நிறைய நாடகம் மற்றும் அதிகப்படியான எதிர்வினைகளை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு பெற்றோராக தங்கள் வேலையில் கூட சாதாரணமாக இருக்க மாட்டார்கள்.
பெற்றோர்களுக்கு குழந்தைகளை சரியாக வளர்க்கக்கூடிய மிக முக்கியமான பொறுப்புள்ளது. இந்த சமூகத்தில் ஒரு குழந்தை நல்லவராக இருந்தால், அதற்கு பெற்றோரின் வளர்ப்புதான் காரணமாக இருக்கும். எந்த பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு தவறானதை சொல்லி கொடுக்க மாட்டார்கள், தவறான பாதைக்கு அழைத்து செல்ல மாட்டார்கள். அப்படி செய்தால், அவர்கள் நல்ல பெற்றோரே கிடையாது. பெற்றோர்களும் மனிதர்களாக இருப்பதால், அவர்கள் தவறு செய்பவர்களாகவும், நிறைய தவறுகளைச் செய்யவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இருப்பினும், பெற்றோரின் செயல்கள், உணர்ச்சி ரீதியில் முதிர்ச்சியடையாமல் இருந்தால், அது குழந்தையின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பல குழந்தைகள் உணர்ச்சி ரீதியில் முதிர்ச்சியடையாத பெற்றோருடன் வளர்கிறார்கள். இதனால், குழந்தைகள் உணர்ச்சி ரீதியாகவும் காயமடையலாம். அவர்களின் குழந்தை பருவ அதிர்ச்சியை அவர்களின் இளமை பருவத்திலும் சுமந்து, அவர்களின் நடத்தை, ஆளுமை மற்றும் உறவுகளில் பிரதிபலிக்கலாம். இக்கட்டுரையில், உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாத பெற்றோரின் வகைகள் மற்றும் குழந்தைகளின் வாழ்வில் அவை எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பற்றி காணலாம்.
சில பெற்றோர்கள் ஏன் உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையவில்லை?
பெற்றோர்கள் உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாத நிலையில், அவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த இணைப்பு அதிர்ச்சி, ஆரம்ப துன்புறுத்தல் அல்லது பெற்றோரை நிராகரிக்கும் இடத்திலிருந்து குழந்தைகளை வளர்க்கிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தில் துன்புறுத்தலை அனுபவித்து இருக்கலாம் அல்லது புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். மேலும் அவர்களின் சொந்த குழந்தையின் தேவைகள் மற்றும் சுய-மையப்படுத்துதல் ஆகியவற்றை தெரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் முதிர்ச்சியடையாத பெற்றோராகவே இருப்பார்கள்.
கட்டுப்படுத்தும் பெற்றோர்கள்
ஹெலிகாப்டர் பெற்றோர்கள் என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை மைக்ரோமேனேஜ் செய்ய வாய்ப்புள்ளது. இவர்கள் பெரும்பாலும் குழந்தைகள் எல்லா நேரத்திலும் சரியானவர்களாக இருக்க வேண்டும் என்று கோருகிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தை செய்த தவறுகளை எளிதில் மன்னிக்க மாட்டார்கள். மேலும் கோபம் மற்றும் தண்டனையை குழந்தைகளுக்கு தரலாம். இந்த வகையான பெற்றோருக்குரிய பாணியில் வளர்க்கப்படும் குழந்தைகள் பெரும்பாலும் பரிபூரணவாதிகளாக இருப்பார்கள். பெரிய சாதனையாளர்கள் மற்றும் தங்களைப் பற்றி மிகவும் விமர்சிக்கும் பிரபலமானவர்களாக வளர்கிறார்கள். அவர்கள் தகுதியுடையவர்களாக உணர வெளிப்புற சரிபார்ப்புக்காக போராடலாம்.
உணர்ச்சி அல்லது உணர்ச்சியற்ற பெற்றோர்
இந்த பெற்றோர்கள் நிறைய நாடகம் மற்றும் அதிகப்படியான எதிர்வினைகளை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு பெற்றோராக தங்கள் வேலையில் கூட சாதாரணமாக இருக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளுடனான உறவிலும் நிறைய உணர்ச்சிகளோடு விளையாடுவார்கள். சில சமயங்களில் அவர்கள் குழந்தைகளோடு ஒட்டிக்கொண்டிருக்கலாம், மற்றொரு கட்டத்தில் அவர்கள் குழந்தைகளை விட்டு தொலைவில் இருப்பது போல நடந்துகொள்ளலாம். உணர்ச்சிப் பாதுகாப்பு இல்லாத இத்தகைய கணிக்க முடியாத சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகள், அதிக கவலை, மனச்சோர்வு அல்லது உணர்ச்சி ரீதியில் தங்களைத் தாங்களே சீர்குலைக்கக்கூடிய நபர்களாக மாறலாம்.
நிராகரிக்கும் பெற்றோர்கள்
இந்த வகையான பெற்றோர்கள் பெற்றோராக தங்கள் வேலையைச் செய்ய மிகவும் உற்சாகமாக இருப்பதில்லை. இதன் விளைவாக, அவர்கள் தங்கள் குழந்தைகளைத் துன்பப்படுத்தலாம். இதனால், குழந்தைகள் தனிமையாக உணருவார்கள். இந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தையின் உணர்ச்சித் தேவைகளை நிராகரிக்கலாம் அல்லது தவிர்க்கலாம். இந்த வகையான உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாத பெற்றோருடன் வளர்க்கப்படும் குழந்தைகள், அவர்களின் காதல் உறவுகள் உட்பட, மக்களுடன் தொடர்புகொள்வதில் சிரமம் உள்ள நபர்களாக மாறலாம்.
அலட்சியம் அல்லது செயலற்றது
இந்த வகையான பெற்றோர்கள் ஒரு பெற்றோரைப் போல் மிகவும் சாதாரணமாக தோன்றலாம். இருப்பினும், இருண்ட பக்கத்தில், அவர்களின் குழந்தையின் நலனில் அக்கறை இல்லாததால், குழந்தை புறக்கணிக்கப்பட்டதாக அல்லது பிரச்சனைகளுக்கு உட்பட்டதாக உணரலாம். அலட்சியமாக இருக்கும் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் தங்கள் பெற்றோர் மீது அதிக வெறுப்புணர்வைக் கொண்டிருப்பதற்கும், கோபம் அல்லது அவமானம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதற்கும் வழிவகுக்கும். மேலும், இந்த குழந்தைகள் கவலை, மனச்சோர்வு அல்லது பிற மனநல நோயறிதல்களின் அபாயங்களுக்கு மிகவும் பாதிக்கப்படலாம்.