Latest Updates
-
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
பெற்றோர்களே! உங்க குழந்தைகளை உலகம் தெரிந்தவர்களாக வளர்ப்பது எப்படி தெரியுமா?
உங்கள் குழந்தை பிரைவசியை விரும்பினால், அதை அவர்களுக்கு கொடுங்கள். இந்த குழந்தைகள் தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணருவதால் அவர்களின் பிரைவசியை நீங்கள் ஆக்கிரமிக்க வேண்டாம்.
குழந்தைகளை வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதற்கு கையேடு எதுவும் இல்லை. மேலும் குழந்தையின் தன்மை, குடும்பக் காரணிகள் மற்றும் பிற காரணங்களைக் கருத்தில் கொண்டு அதை உடைக்கும்போது அது ஒரு பெரிய பொறுப்பு மற்றும் கடமையாக தெரிகிறது. உள்முக சிந்தனை கொண்ட குழந்தையை வளர்ப்பது எளிதான வேலை அல்ல. வெளியில் செல்லாமல், யாருடனும் பேசாமல் தனிமையிலே இருக்கும் நபர்களை நாம் உள்முக சிந்தனையாளர்கள் என்கிறோம். உங்கள் உள்முக சிந்தனையுள்ள குழந்தைக்கு உலகில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை கற்பிப்பது மற்றும் வெளி உலகத்திற்கு ஏற்ப அவர்களை சரிசெய்ய உதவுவது மிகவும் கடினம். இந்த பிஸியான வாழக்கையில், உள்முக சிந்தனையாளராக இருப்பது மிகவும் கடினம்.

உள்முக சிந்தனை கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் சமூக வாழ்க்கையைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். ஏனெனில் அது எவ்வளவு முக்கியமானது மற்றும் வெளி உலகம் பற்றி அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். உள்முக சிந்தனை கொண்ட உங்கள் குழந்தைகளுக்கு வெளி உலகத்தை சமாளிக்க உதவும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

தோல்வியுற்றவர்களாக பார்க்காதீர்கள்
உள்முக சிந்தனையாளர்கள் மற்ற மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள். வெளிப்புற சூழலில் ஒன்றிணைக்க இயலாமல் இருப்பதால், இந்த நபர்கள் மற்றவர்களை விட தாழ்ந்தவர்கள் இல்லை. உங்கள் குழந்தை உள்முகமான இயல்பைச் சமாளிக்க உதவும் பணியில் நீங்கள் இறங்கும்போது, அவர்களை தோல்வியுற்ற நபர்களாகப் பார்க்காதீர்கள். ஒரு வழிகாட்டியாகவும், பாதுகாவலராகவும், உள்முகமாக இருப்பது என்பது ஒரு தொடர்புடைய நோக்கத்திற்காகச் செலுத்தப்படக்கூடிய ஒரு பலம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏற்றுக்கொள்ளுங்கள்
ஏற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு குழந்தை உள்நோக்கத்தை வெல்ல உதவும் முதல் மற்றும் முக்கியமான படியாகும். மற்றவர்களிடம் பேசுவது கடினமாக இருக்கும் நபர்களுடன் பழகும்போது, ஒரு குழந்தைக்கு ஒரு அடி எடுத்து வைப்பது எப்போதும் நல்லது. அவர்களின் இயல்பான நடத்தையைப் பற்றி சண்டையிடுவதற்குப் பதிலாக அவர்களை புரிந்துகொள்ளுங்கள். இது அவர்களின் இயற்கையான குணம், நீங்கள் அதை எதுவும் செய்ய முடியாது அல்லது நீங்கள் அதை மாற்ற முயற்சி செய்ய வேண்டாம். குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

உணர்ச்சி வெளிப்பாட்டைக் கண்டறியவும்
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் மற்றும் பொழுதுபோக்குகள் இருக்கலாம். இவை உணர்ச்சிகளில் இருந்து விடுபட உங்கள் குழந்தைகளுக்கு உதவும் சரியான வழி. உங்கள் குழந்தையிடம் அதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இது யோகா, ஓவியம், இசை, பாடல் அல்லது புதிய இடங்களுக்கு பயணம் செய்வது போன்ற எந்த விஷயமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

பேச அவர்களை ஊக்குவிக்கவும்
உங்கள் குழந்தை பிரைவசியை விரும்பினால், அதை அவர்களுக்கு கொடுங்கள். இந்த குழந்தைகள் தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணருவதால் அவர்களின் பிரைவசியை நீங்கள் ஆக்கிரமிக்க வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவர்களை மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்காமல் படிப்படியாக அவர்களின் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும்.

அவர்களை கட்டாயபடுத்த வேண்டாம்
நீங்கள் கையாள்வது மனித இயல்பு என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அணுகுமுறையில் மென்மையாக இருங்கள் மற்றும் முதலில் உங்கள் குழந்தையுடன் நம்பிக்கையின் அளவை உருவாக்க முயற்சிக்கவும். உங்கள் முயற்சியின் உண்மைத்தன்மையை உங்கள் பிள்ளை புரிந்து கொள்ள ஒரு நேரம் உருவாகும். மறுபுறம் குழந்தைகளை கட்டாயபடுத்துவது அவர் வெளி உலகத்தை ஏற்றுக்கொள்வதை சிதைப்பது மட்டுமல்லாமல், அது உங்கள் குழந்தையுடனான உங்கள் உறவையும் சிதைக்கக்கூடும்.



Click it and Unblock the Notifications