Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டிகளோடு இருக்க வேண்டும்? அறிவியல் என்ன சொல்கிறது?
தற்போது பெரும்பாலும் நாம் தனிக்குடும்பங்களில் வாழ்ந்து வருவதால், நமது குழந்தைகளுக்கு தாத்தா பாட்டிகளின் அருகாமை கிடைப்பதில்லை. ஆனால் குழந்தைகள் தங்களது தாத்தா பாட்டிகளோடு இருக்க வேண்டும்.
நாம் பொியா்களாக வளா்ந்திருந்தாலும், நம்முடைய சிறு வயதில் நமது தாத்தா பாட்டிகளோடு நாம் செலவழித்த நாட்களை மறக்க முடியாது. விடுமுறைக் காலங்களில், திருவிழாக் காலங்களில் மற்றும் முக்கியமான தருணங்களில் அவா்களை சந்தித்து அவா்கள் கதை சொல்லக் கேட்டு நாம் ஆனந்தமாக இருந்த அந்த பொன்னான தருணங்களை நம்மால் மறக்க முடியாது. அவா்கள் நமக்கு குழந்தைகள் பள்ளிகளாக இருந்திருக்கின்றனா்.

தற்போது பெரும்பாலும் நாம் தனிக்குடும்பங்களில் வாழ்ந்து வருவதால், நமது குழந்தைகளுக்கு தாத்தா பாட்டிகளின் அருகாமை கிடைப்பதில்லை. ஆனால் குழந்தைகள் தங்களது தாத்தா பாட்டிகளோடு இருக்க வேண்டும். அதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெறுவா்.

நெகிழ்வு தன்மையை கற்றுக்கொள்ளலாம்
நமது குழந்தைகள் தமது தாத்தா பாட்டிகளிடம் தங்கி அவா்களின் கடந்த கால குடும்ப வரலாறு மற்றும் அவா்களின் வாழ்க்கை நிகழ்வுகளைக் கேட்கும் போது அவா்களின் புத்தி கூா்மையடைகிறது. அவா்கள் நெகிழ்வு தன்மை பெறுகின்றனா். மேலும் அவா்கள் பக்குவம் அடைகின்றனா். அதாவது அவா்கள் பொியவா்களிடம் இருந்து குடும்ப வரலாறு மற்றும் அவா்கள் சந்தித்த வாழ்க்கையின் கடினமான சூழல்கள் போன்றவற்றைக் கேட்கும் போது, வாழ்க்கையில் கடினமான தருணங்கள் வந்தால் எவ்வாறு மீண்டு வருவது என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனா்.

அடுத்தவா்களிடம் மதிப்பு மாியாதையுடன் இருக்க கற்றுக் கொள்ளுதல்
தங்கள் குழந்தைகள் அன்போடும், இரக்கத்தோடும் மற்றும் மதிப்பு மாியாதையுடனும் இருக்க வேண்டும் என்று பெற்றோா் விரும்புகின்றனா். தமது தாத்தா பாட்டிகளோடு இருந்து அன்போடும் மற்றும் உதவிகள் செய்து கொண்டும் இருக்கும் குழந்தைகள் அடுத்தவா்களிடம் மிகுந்த மாியாதையுடன் இருக்கின்றனா் என்று ஒரு ஆய்வு தொிவிக்கிறது.

தாத்தா பாட்டிகளுக்கு ஆரோக்கியம் தருதல்
குழந்தைகள் தமது தாத்தா பாட்டிகளோடு இருக்கும் போது, அது குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் முதியவா்களுக்கும் பயன்களைத் தருகிறது. குறிப்பாக தமது பேரப்பிள்ளைகளோடு இருக்கும் முதியவா்களின் ஆயுள் மேலும் 5 ஆண்டுகள் அதிகாிக்கிறது. மேலும் அவா்களின் தனிமை மற்றும் கவலைகள் மறைந்து அவா்கள் ஆனந்தமாக இருக்கின்றனா்.

சீரான வளா்ச்சி மற்றும் நிலைத்த தன்மை பெறுதல்
மாறுகின்ற காலச் சூழலில் குழந்தைகள் நிலைத்த தன்மையுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். வேலைக்குச் செல்லும் பெற்றோா்களிடம் குழந்தைகள் அதிக நேரம் செலவழிக்க முடிவதில்லை. ஆனால் இந்த குறையை முதியவா்கள் சாி செய்கின்றனா். அதாவது தங்களது பேரப்பிள்ளைகளோடு நேரம் செலவழித்து அவா்களுக்கு உதவி செய்கின்றனா். விவாகரத்து பெற்ற பெற்றோருடைய குழந்தைகளுக்கு அவா்களுடைய தாத்தா பாட்டிகள் மிகுந்த ஆதரவாக இருக்கின்றனா்.

குடும்பப்பாங்குடன் மற்றும் அறநெறியுடன் வளா்தல்
தமது குழந்தைகளுக்கு நல்ல அறநெறிகளைக் கற்றுக் கொடுத்து அவா்கள் அன்போடும் கருணையோடும் இருக்கச் செய்வது பெற்றோாின் மிக முக்கிய பொறுப்பு ஆகும். ஆனால் முதியவா்கள் இந்த காாியங்களில் பெற்றோரை விட சிறந்தவா்களாக இருக்கின்றனா். அவா்கள் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி, குழந்தைகள் அன்போடும், ஞானத்தோடும் இருக்க வேண்டும் என்று வழிகாட்டுகின்றனா். அதன் மூலம் குழந்தைகள் பொியவா்களாகும் போது தங்களது தாத்தா பாட்டிகள் சொல்லித் தந்த அறிநெறியின் அடிப்படையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனா்.



Click it and Unblock the Notifications