Just In
- 3 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.02.2021): இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...
- 13 hrs ago
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- 15 hrs ago
நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்வது உண்மையில் நல்லதா? அதிலிருக்கும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் என்ன?
- 17 hrs ago
பெண்களின் முக்கியமான முடி பிரச்சினையை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா?
Don't Miss
- News
இன்று பாரத் பந்த்.. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்
- Automobiles
விற்பனைக்கு வரவிருக்கும் 3 புதிய சீன எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! சூப்பர் சோகோ பிராண்டில் வருகின்றன...
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டிகளோடு இருக்க வேண்டும்? அறிவியல் என்ன சொல்கிறது?
நாம் பொியா்களாக வளா்ந்திருந்தாலும், நம்முடைய சிறு வயதில் நமது தாத்தா பாட்டிகளோடு நாம் செலவழித்த நாட்களை மறக்க முடியாது. விடுமுறைக் காலங்களில், திருவிழாக் காலங்களில் மற்றும் முக்கியமான தருணங்களில் அவா்களை சந்தித்து அவா்கள் கதை சொல்லக் கேட்டு நாம் ஆனந்தமாக இருந்த அந்த பொன்னான தருணங்களை நம்மால் மறக்க முடியாது. அவா்கள் நமக்கு குழந்தைகள் பள்ளிகளாக இருந்திருக்கின்றனா்.
தற்போது பெரும்பாலும் நாம் தனிக்குடும்பங்களில் வாழ்ந்து வருவதால், நமது குழந்தைகளுக்கு தாத்தா பாட்டிகளின் அருகாமை கிடைப்பதில்லை. ஆனால் குழந்தைகள் தங்களது தாத்தா பாட்டிகளோடு இருக்க வேண்டும். அதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெறுவா்.

நெகிழ்வு தன்மையை கற்றுக்கொள்ளலாம்
நமது குழந்தைகள் தமது தாத்தா பாட்டிகளிடம் தங்கி அவா்களின் கடந்த கால குடும்ப வரலாறு மற்றும் அவா்களின் வாழ்க்கை நிகழ்வுகளைக் கேட்கும் போது அவா்களின் புத்தி கூா்மையடைகிறது. அவா்கள் நெகிழ்வு தன்மை பெறுகின்றனா். மேலும் அவா்கள் பக்குவம் அடைகின்றனா். அதாவது அவா்கள் பொியவா்களிடம் இருந்து குடும்ப வரலாறு மற்றும் அவா்கள் சந்தித்த வாழ்க்கையின் கடினமான சூழல்கள் போன்றவற்றைக் கேட்கும் போது, வாழ்க்கையில் கடினமான தருணங்கள் வந்தால் எவ்வாறு மீண்டு வருவது என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனா்.

அடுத்தவா்களிடம் மதிப்பு மாியாதையுடன் இருக்க கற்றுக் கொள்ளுதல்
தங்கள் குழந்தைகள் அன்போடும், இரக்கத்தோடும் மற்றும் மதிப்பு மாியாதையுடனும் இருக்க வேண்டும் என்று பெற்றோா் விரும்புகின்றனா். தமது தாத்தா பாட்டிகளோடு இருந்து அன்போடும் மற்றும் உதவிகள் செய்து கொண்டும் இருக்கும் குழந்தைகள் அடுத்தவா்களிடம் மிகுந்த மாியாதையுடன் இருக்கின்றனா் என்று ஒரு ஆய்வு தொிவிக்கிறது.

தாத்தா பாட்டிகளுக்கு ஆரோக்கியம் தருதல்
குழந்தைகள் தமது தாத்தா பாட்டிகளோடு இருக்கும் போது, அது குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் முதியவா்களுக்கும் பயன்களைத் தருகிறது. குறிப்பாக தமது பேரப்பிள்ளைகளோடு இருக்கும் முதியவா்களின் ஆயுள் மேலும் 5 ஆண்டுகள் அதிகாிக்கிறது. மேலும் அவா்களின் தனிமை மற்றும் கவலைகள் மறைந்து அவா்கள் ஆனந்தமாக இருக்கின்றனா்.

சீரான வளா்ச்சி மற்றும் நிலைத்த தன்மை பெறுதல்
மாறுகின்ற காலச் சூழலில் குழந்தைகள் நிலைத்த தன்மையுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். வேலைக்குச் செல்லும் பெற்றோா்களிடம் குழந்தைகள் அதிக நேரம் செலவழிக்க முடிவதில்லை. ஆனால் இந்த குறையை முதியவா்கள் சாி செய்கின்றனா். அதாவது தங்களது பேரப்பிள்ளைகளோடு நேரம் செலவழித்து அவா்களுக்கு உதவி செய்கின்றனா். விவாகரத்து பெற்ற பெற்றோருடைய குழந்தைகளுக்கு அவா்களுடைய தாத்தா பாட்டிகள் மிகுந்த ஆதரவாக இருக்கின்றனா்.

குடும்பப்பாங்குடன் மற்றும் அறநெறியுடன் வளா்தல்
தமது குழந்தைகளுக்கு நல்ல அறநெறிகளைக் கற்றுக் கொடுத்து அவா்கள் அன்போடும் கருணையோடும் இருக்கச் செய்வது பெற்றோாின் மிக முக்கிய பொறுப்பு ஆகும். ஆனால் முதியவா்கள் இந்த காாியங்களில் பெற்றோரை விட சிறந்தவா்களாக இருக்கின்றனா். அவா்கள் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி, குழந்தைகள் அன்போடும், ஞானத்தோடும் இருக்க வேண்டும் என்று வழிகாட்டுகின்றனா். அதன் மூலம் குழந்தைகள் பொியவா்களாகும் போது தங்களது தாத்தா பாட்டிகள் சொல்லித் தந்த அறிநெறியின் அடிப்படையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனா்.