Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
உங்க குழந்தைக்கு பெற்றோராக மாறும் சொந்தக்காரர்களை நீங்க எப்படி சமாளிக்கணும் தெரியுமா?
சிலர் எப்போதும் சிறந்த பெற்றோராக இருக்கிறார்கள் என்று அனைவரும் நம்புகிறார்கள். அது அவர்களின் சொந்த குழந்தைகளுக்கு உண்மையாக இருந்தாலும், மற்ற குழந்தைக்கு அது உண்மையல்ல.
குழந்தைகளை நல்லவர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் வளர்ப்பது என்பது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமை. ஆனால், எல்லா பெற்றோர்களும் இங்கு ஒரே மாதிரி குழந்தையை வளர்ப்பதில்லை. அதேபோல, எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பதில் எப்போதும் மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருப்பதால் இது ஒரு அற்புதமான பாடமாகும். ஒரு பெற்றோரின் பிரச்சனை பல்வேறு விளக்கங்களுக்கு திறந்திருக்கும். உங்களின் காணக்கூடிய அதிருப்தி அல்லது துயரத்தைக் கவனிக்கும் ஒருவர் அல்லது உங்கள் உறவினர், அவர்களின் ஆலோசனையை உங்களுக்கு வழங்கலாம். சிறந்த நோக்கத்துடன் ஏதாவது கூறப்பட்டால், அது பயனுள்ளதாக இருக்கும்.

இல்லையெனில், உங்களை அல்லது உங்கள் குழந்தையை கேலி செய்யும் நோக்கத்துடன் சில விஷயங்களை கூறலாம். இருப்பினும், உங்களை அல்லது உங்கள் குழந்தையை இழிவுபடுத்துவதற்கான சாக்குப்போக்காக அறிவுரையைப் பயன்படுத்தும் மோசமான குணம் படைத்த சிலர் உள்ளனர். அத்தகைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை நீங்கள் எவ்வாறு கையாள்வது என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பெற்றோரின் பிரச்சினைகளை மற்றவரிடம் விவாதிக்க வேண்டாம்
பெற்றோர்களே, உங்கள் பிரச்சனைகளை அனைவரின் முன்னிலையிலும் விவாதிக்க வேண்டாம். நீங்கள் உங்கள் குழந்தையுடன் எழும் பிரச்சனையைப் பற்றி பேசுவதன் மூலம்-வழிகாட்டலுக்கான கோரிக்கையாக உறவினர்கள் எடுத்துக்கொள்ளலாம். அறிவுரை என்ற பெயரில் அவர்கள், பலவற்றை உங்களிடமும் உங்கள் குழந்தையிடமும் கூறுவார்கள். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான உறவில் சலசலப்பை ஏற்படுத்தலாம். நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்குள் பிரச்சினைகள் ஏற்படும் போது, மற்றவரிடம் விவாதிக்க வேண்டாம்.

உங்கள் பார்வையை தெரிவிக்கவும்
உறவினர்கள் பெரும்பாலும் பெற்றோருக்கு ஆலோசனைகளை வழங்குகிறார்கள். அதில் சில உண்மையில் நல்லவை மற்றும் நல்ல நோக்கத்துடனும் தெளிவுடனும் கூறப்படும். ஆனால், எல்லா விஷயங்களும் அவ்வாறு இருக்காது. பொதுவாக, நீங்கள் ஏதாவது செய்யுமாறு யாராவது பரிந்துரைத்தால், உத்தேசிக்கப்பட்ட முடிவுகள் அல்லது செயல்முறை சாதகமற்ற எதிர்வினையை ஏற்படுத்தக்கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா போன்ற கூடுதல் தகவல்களை அவர்களிடம் கேட்க வேண்டும். அந்த நேரத்தில், நேர்மையற்ற ஆலோசகர்கள் பதில் கூறமுடியாமல் ஓடிவிடுவார்கள்.

நல்லதை தேர்ந்தெடுங்கள்
பெற்றோர்களாகிய நீங்கள் எல்லா இடத்திலும் நல்ல விஷயங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில், இதில் உங்கள் வாழ்க்கையோடு, உங்கள் குழந்தையின் வாழ்க்கையும் சம்பந்தப்பட்டதாக இருக்கும். உங்களுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது, அறிவுரை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். உங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது, பெற்றோராக உங்களுக்கு எந்த அனுபவமும் இல்லை என்பதைக் அது குறிக்காது. உண்மையில் நல்ல பெற்றோராக இருக்க சிலர் போராடுகிறார்கள். நல்ல எண்ணம் கொண்ட ஆலோசனையைத் தேர்வு செய்யவும், ஆனால் கிண்டல் அல்லது தவறான கண்டிப்பை புறக்கணிக்கவும்.

ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானது
சிலர் எப்போதும் சிறந்த பெற்றோராக இருக்கிறார்கள் என்று அனைவரும் நம்புகிறார்கள். அது அவர்களின் சொந்த குழந்தைகளுக்கு உண்மையாக இருந்தாலும், மற்ற குழந்தைக்கு அது உண்மையல்ல. ஏனெனில், இங்கு எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள் இல்லை, ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானது. உங்கள் குழந்தையும் நீங்களும் விரும்புவதை அவர்களிடம் பணிவாகச் சொல்லுங்கள். இது பெற்றோர் மற்றும் பிள்ளைகள் உறவை நன்கு வலுப்படுத்த உதவும்.

புன்னகைத்து தலையசைக்கவும்
நீங்கள் ஒரு கடினமான உறவினரிடம் சிக்கிக் கொண்டால், அந்த இடத்தில் நீங்கள் திரும்பிப் பேச முடியாது. அதனால், புன்னகைத்து, நெருக்கமாகக் கேட்பது போல் பாசாங்கு செய்யுங்கள். சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு வழங்குங்கள், ஒரு வார்த்தை கூட அவர்களிடம் திரும்பி பேச வேண்டாம். நிச்சயமாக, ஆலோசனையைப் புறக்கணிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் உங்கள் மௌனம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதற்கு எந்த நியாயமும் இல்லை என்பதை அவர்களுக்குப் புரியவைக்கும்.



Click it and Unblock the Notifications