Just In
- 1 hr ago Today Rasi Palan 24 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் முக்கிய வணிக முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
- 7 hrs ago கேது பெயர்ச்சியால் 2025 வரை இந்த ராசிக்காரர்களை கையிலயே பிடிக்க முடியாதாம்... அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 8 hrs ago காபி Vs. டீ: இரண்டில் உங்களுக்கு பிடிச்சது எது? இதில் மிகவும் ஆரோக்கியமானது எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- 10 hrs ago உங்க எடை திடீரென குறையுதா? ரொம்ப சந்தோஷப்படாதீங்க... உங்களுக்கு இந்த ஆபத்தான நோய்கள் இருக்க வாய்ப்பிருக்காம்!
Don't Miss
- News ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு.. தமிழக அரசு சூப்பர் வசதி.. ரேசன் கார்டு தொலைந்துவிட்டதா? இனிமேல் ஈஸி
- Technology அடிச்சு தூக்கும் ஆர்டர்.. ரூ.16,999 பட்ஜெட்ல OIS கேமரா.. 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. யாரு விடுவா?
- Automobiles உலகின் சக்தி வாய்ந்த பெண் என்பதை நீதா அம்பானி நிரூபிச்சுட்டாங்க! இவங்க காசை காசாவே பாக்க மாட்டாங்க போலிருக்கே!
- Sports கடைசி 2 பந்தில் 5 ரன் எடுத்தால்.. வெற்றிக்கு அருகே வந்த சன்ரைசர்ஸ்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.
- Movies எப்படி இருந்த சமந்தா.. இப்படி மாறிட்டாரே.. 2 பீஸ் உடையை விட இந்த லுக் தாறுமாறா இருக்கே!
- Finance மாருதி சுசூகி என்ன இப்படி இறங்கிட்டாங்க.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!
- Travel சென்னைக்கு பக்கத்தில ரோப் காருடன் செல்லக்கூடிய வசதி – அழகான யோக நரசிம்மர் கோயில்!
- Education டிஎன்பிஎஸ்சி குரூப்-1 நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சி
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் 'தொடர் வாந்தி நோய்க்குறி' பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை!
குழந்தைகள் அல்லது பெரியவர்கள் பல முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால் அதனை எளிதாக புறக்கணிக்கக் கூடாது . இதற்கு தொடர் வாந்தி நோய்க்குறி என்னும் சைக்ளிக் வாமிட்டிங் சின்ரோம் என்னும் பாதிப்பு காரணமாக இருக
ஒரு குழந்தையோ அல்லது பெரியவரோ ஒருமுறை வாந்தி எடுத்தால் அது ஒரு பிரச்சனை என்று மருத்துவரிடம் செல்வதில்லை. உடனே வாந்தியைப் போக்க சில எளிய தீர்வுகளை முயற்சிப்பது வழக்கம். இருப்பினும் ஒருமுறைக்கு மறுமுறை அல்லது மீண்டும் மீண்டும் வாந்தி எடுத்தால் அதற்கான காரணத்தை நாம் யோசிக்கத் தொடங்குவோம். குழந்தைகள் அல்லது பெரியவர்கள் பல முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால் அதனை எளிதாக புறக்கணிக்கக் கூடாது . இதற்கு தொடர் வாந்தி நோய்க்குறி என்னும் சைக்ளிக் வாமிட்டிங் சின்ரோம் என்னும் பாதிப்பு காரணமாக இருக்கலாம்.
பொதுவாக இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நோயாக உள்ளது. தொடர் வாந்தியுடன் கூடிய குமட்டல் காரணமாக குழந்தையால் எதையும் சாப்பிட முடியாத நிலை உண்டாகிறது. இந்த நோய்க்குறிக்கு சரியான காரணம் எதுவும் இல்லை, ஆனால் சில குறிப்பிட்ட உணவுகள் இதனை மேலும் அதிகமாக்குகின்றன. இதனை வயிற்று மைக்ரைன் என்றும் கூறுவர், காரணம் இந்த நோய்க்குறியால் பாதிக்கப்படும் நபர் மிக அதிக வயிற்று வலியை அனுபவிப்பார்.
குழந்தைகளுக்கு பொதுவாக இந்த பாதிப்பு உண்டாகிறது
பொதுவாக 4 முதல் 8 வயது குழந்தைகள் தொடர் வாந்தி நோய்க்குறியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பிறந்து 6 நாட்களே ஆன கை குழந்தைகள் மற்றும் 8 வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகள் ஆகியோர் சில நேரங்களில் பாதிக்கப்படுகின்றனர். 70 வயதிற்கு மேல் உள்ள பெரியவர்களும் சில நேரங்களில் பாதிப்பிற்குள்ளாகின்றனர். பிள்ளைகள் வளர்ந்தபின் இந்த பாதிப்பு தானாகவே மறைந்து விடக்கூடும். பொதுவாக ஒரு நபர் உட்கொள்ளும் உணவு வாந்தி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது, ஆனால் அதுவே இரண்டு முறைக்கு மேல் வாந்தி எடுக்கும் நிலை ஏற்பட்டால் அது ஆரோக்கியத்தில் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறியாகும்.
தொடர் வாந்தி நோய்குறிக்கான அறிகுறிகள்:
தொடர் வாந்தி நோய்குறிக்கான அறிகுறிகள் சிலவற்றை இப்போது காண்போம்.
* ஒரு குழந்தை அல்லது பெரியவர் ஏதாவது ஒரு உணவை உட்கொண்டு ஒருமுறைக்கு மேல் குறைந்தது ஐந்து முறை வாந்தி எடுப்பது.
* ஒரு நாளில் 1-10 மணிநேரம் வாந்தி தொடர்ச்சியாக இருக்கும் போது குமட்டல் உணர்வும் சேர்ந்து இருக்கும்.
* ஒவ்வொரு நோயாளிக்கும் வெவ்வேறு வகையான அறிகுறிகள் காணப்படுகிறது .
* ஒரு மணிநேரத்தில் 4-5 முறை வாந்தி வரலாம் .
* அதிகாலை நேரம் அல்லது தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் பொதுவாக வாந்தி உண்டாகலாம் .
* வாந்தியுடன் குமட்டல், வயிற்று வலி மற்றும் சோர்வு ஆகியவை இருக்கும். சில நோயாளிகளுக்கு காய்ச்சல் உணர்வு இருக்கும். சிலர் வெளிர் நிறத்தில் மாறலாம்.
* சுற்றுப்புறக் காரணிகள் தொடர் வாந்தி நோய்க்குறிக்கு காரணமாக இருக்கலாம் . சிலருக்கு தலைவலி மற்றும் தலைசுற்றல் போன்றவை ஏற்படலாம்.
தொடர் வாந்தி நோய்குறிக்கான காரணங்கள் :
முன்னர் கூறியதுபோல் தொடர் வாந்தி நோய்குறிக்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. ஆனால் இதற்கான சில காரணிகள் இருக்க முடியும்.
* தன்னுடல் சார்ந்த நோய்
* ஒற்றை தலைவலிக்கான குடும்ப வரலாறு
* பல்வேறு காரணிகளால் குழந்தைகளுக்கு அதிகரித்த மனஅழுத்தம் ஏற்படுவது . மனஅழுத்த ஹார்மோன்கள் பொதுவாக செரிமானம் தொடர்பான கோளாறுகளை எல்லா வயதினருக்கும் ஏற்படுத்துகிறது .
* சூடான நீரில் எப்போதும் குளிப்பது தொடர் வாந்தி நோய்குறிக்கான ஒரு சாத்தியமான காரணம் ஆகும்.
தொடர் வாந்தி நோய்குறிக்கான பகுதிகள்:
தொடர் வாந்தி நோய்க்குறிகள் நான்கு கட்டங்களைக் கொண்டுள்ளது என்று மருத்துவர் தீட்சித் குறிப்பிடுகிறார்.
1. தொடக்க நிலை
இந்த நிலைக்கான அறிகுறிகள்:
* தீடீரென்று வாந்தி உண்டாவது
* சருமம் வெளிர் நிறத்தில் தோன்றுவது
* வாந்திக்கு முன்னர் மற்றும் பின்னர் வியர்வை மற்றும் குமட்டல்
2. வாந்தி நிலை
இந்த நிலைக்கான அறிகுறிகள்:
* 20-30 நிமிடங்கள் நீடிக்கும் வாந்தி
* தொடர்ந்து 8-10 நாட்கள் , ஒரு மணி நேரத்தில் 5-6 முறை வாந்தி எடுப்பது
* வயிற்று வலி, குமட்டல், தலைவலி, காய்ச்சல், மயக்கம், அதிகரித்த எச்சில், வெளிர் நிற சருமம்
3. குணமடையும் நிலை
இந்த நிலைக்கான அறிகுறிகள்:
* குமட்டல் கட்டுப்பட்டு, வாந்தி மட்டும் இருக்கும்
* வாந்தி நிலையில் இருக்கும் அறிகுறிகள் சற்று குறைந்து காணப்படும்.
* குணமடைவதற்கான அடுத்த அடுத்த அறிகுறிகள் தென்படும்
4. குணமடைந்த நிலை:
இதுவரை அனுபவித்த அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலை.
ஆனால் மேலே கூறிய அறிகுறிகள் மற்றும் நிலைகள் மறுமுறை உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சைக்கான தீர்வை கேளுங்கள்.