Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
பெண் குழந்தைகளிடன் தாய் இதை பற்றி எல்லாம் பேச தயங்க கூடாது!
பெண்குழந்தைகளிடன் தாய் கட்டாயம் இதை பற்றி பேச வேண்டும்
தங்களது பெண் குழந்தைகளை சமூகத்தில் நல்ல மதிப்புடனும் திறமையுடனும் வளர்க்க ஒரு தாய் சில விஷயங்களை தனது பெண் குழந்தையிடன் பேச வேண்டியது அவசியம். உங்களுக்கு உங்கள் குழந்தைகளிடம் சில விஷயங்களை பற்றி பேச வெட்கமாகவும், கூச்சமாகவும் இருந்தால், தயவு செய்து உங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவற்றை தூக்கி எரியுங்கள்.
உங்கள் குழந்தையின் வருங்காலம் சிறப்பாக அமைய நீங்கள் சில விஷயங்களை பற்றி வெளிப்படையாக உங்கள் பெண் பிள்ளைகளிடன் பேச வேண்டியது அவசியம். நீங்கள் எதை பற்றி எல்லாம் உங்களது பெண் குழந்தைகளிடம் மனம் திறந்து பேச வேண்டும் என காணலாம்.

1. காது கொடுத்து கேளுங்கள்
உங்களது பெண் குழந்தைகள் என்ன சொல்கிறார்கள் என்பதை சற்று காது கொடுத்து கேளுங்கள். அவரது பேச்சை தேவையற்றதாக கருதாதீர்கள். அவர்கள் பேசி முடித்தவுடன் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் தெரிவியுங்கள்.

2. நம்பிக்கை கொடுங்கள்
உங்கள் பெண் குழந்தைகள் நம்பிக்கையான சூழலில் வளர வேண்டியது அவசியம். பெண் குழந்தைகள் மீது நம்பிக்கை வையுங்கள். எடுத்தற்கெல்லாம் அவர்களை சந்தேகப்படாதீர்கள். பெண் குழந்தைகளிடம் பேசும் போது மரியாதையான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டியது அவசியம்.

3. தாயாக இருங்கள்!
உங்கள் குழந்தைகளுக்கு தாயாக இருங்கள். அதையும் தாண்டி நண்பர்களாகவும் நீங்கள் இருக்க வேண்டாம். உங்கள் குழந்தைகள் அவர்களுக்கு உரிய வயதினரை தங்களாகவே நண்பர்களாக தேர்ந்தெடுத்துகொள்வார்கள்.

4. வாழ்க்கைமுறையை புரிந்து கொள்ளுங்கள்
குழந்தைகள் என்றைக்கும் உங்களது குழந்தைகளாகவே இருக்கமாட்டார்கள். அவர்கள் வளரும் போது தங்களுக்கென ஒரு வாழ்க்கைமுறை, ஸ்டைல்களை அமைத்துக்கொள்வார்கள். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதை நினைத்து கவலைப்பட தேவையில்லை.

5. மரியாதை கொடுக்க சொல்லி கொடுங்கள்
குழந்தைகள் பிறக்கும் போதே அனைத்தையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை. பிறரை மதிக்கவும், அனைவருக்கும் மரியாதை தரவும் நீங்கள் தான் அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.

6. சுயமரியாதை
சுயமரியாதை என்பது தன்னை தானே உயர்வுபடுத்தி நினைப்பது. பெண்களுக்கு சுயமரியாதை கட்டாயம் இருக்க வேண்டும். அடிமைத்தனமாக இருப்பது, தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை இது போக்கும். மற்றவர்கள் நமக்கு மரியாதை கொடுக்கும் முன் நம்மை நாமே மதித்து நடந்து கொள்வது வேண்டும்.



Click it and Unblock the Notifications