Just In
- 2 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 8 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 8 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 9 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் முன் இந்த 5 விஷயம் கவனத்துல வெச்சுக்குங்க!
இங்கே இரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன
இரண்டு குழந்தைகள் பெற வேண்டும் என்பதே பெற்றோர்கள் பலரது எண்ணமாக இருக்கிறது. முதல் குழந்தைக்கு பிறகு இரண்டாவது குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளி தேவை. மேலும் ஒரு சில விஷயங்களையும் சிந்திக்க வேண்டியதும் அவசியம். இரண்டாவது குழந்தை பெறும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
முதல் குழந்தையின் வயது
முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே குறிப்பிட்ட இடைவெளி என்பது மிகவும் அவசியம். இரண்டாவது குழந்தை பிறந்து விட்டால், முதல் குழந்தையை முன்பு போல் உங்களால் கவனிக்க முடியாது. இதனை முதல் குழந்தை புரிந்து கொள்ளும் திறன் முதல் குழந்தைக்கு இருப்பது அவசியம்.
முதல் குழந்தையின் ஏக்கம்
இரண்டாவது குழந்தை பிறந்து விட்டால், முதல் குழந்தை தன் மீது பெற்றோருக்கு சற்று பாசம் குறைந்துவிட்டதாக நினைக்கும். இதை பற்றி கவலைப்பட வேண்டாம். இது அனைத்து உறவுகளுக்கும் இடையே நடப்பது தான். இரண்டாவது குழந்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடந்துகொள்ளுங்கள். உங்களது முதல் குழந்தை தனது முழு நாளையும் பள்ளியில் செலவழிப்பதாக இருப்பது நல்லது.
இத எல்லாம் செய்யாதீங்க
இப்ப பிறந்த இந்த குழந்தை மீது அம்மா, அப்பா அதிகமாக பாசம் வைத்துள்ளனர் என இரண்டாம் குழந்தை ஒதுங்க தான் செய்யும். அதை வலுப்படுத்தும் விதமாக பெற்றோர்கள் நடந்துகொள்ள கூடாது.
அதற்காக அந்த குழந்தை மீது எங்களுக்கு பாசமே இல்லை. உன்னை மட்டும் தான் எங்களுக்கு பிடிக்கும் என்ற பொய்யான நம்பிக்கையையும் கொடுக்க கூடாது.
பொறுப்பு
இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பல பெற்றோர்கள் முதல் குழந்தையிடம் இரண்டாவது குழந்தையை பற்றி பேச தொடங்கிவிடுகிறார்கள். இந்த பாப்பாவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அம்மா, அப்பா மற்றும் உன் பொறுப்பு நாம் மூவரும் தான் உன் தம்பி அல்லது தங்கையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி பொறுப்பு உணர்வை வர வையுங்கள்.
பிடுங்கி தர வேண்டாம்
முதல் குழந்தையின் விளையாட்டு பொருட்கள், முதல் குழந்தை பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை அனுமதி இன்றி இரண்டாவது குழந்தைக்கு கொடுக்காதீர்கள். முதல் குழந்தையின் அனுமதி அவசியம்.