Just In
- 3 min ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- 1 hr ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 3 hrs ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
Don't Miss
- Finance Tesla: எலான் மஸ்க் அதிரடி.. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபத்தில் 55% சரிவு..!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- News மகளிர் உரிமை தொகை திட்டத்தில்.. வருகிறது மிகப்பெரிய விதி மாற்றம்? பெண்கள் எதிர்பார்த்த முக்கிய சலுகை
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கீழ்படியாமல் நடக்கும் குழந்தைகளைக் கையாளுவது எப்படி?
தவறான பாதையில் சென்றுவிட்ட ஒரு குழந்தையைக் கையாளுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. உண்மையைச் சொன்னால் சில பெற்றோர் தங்கள் பொறுமையையும், நம்பிக்கையையும் இதில் இழந்துவிடுவதும் கூட உண்டு. இதுப்போன்ற குழந்தைகள் பொதுவாக மிகவும் சத்தமாகப் பேசுவதும், கூச்சலிடுவதும் முரட்டுத்தனமாக நடப்பதும் இயல்பு. இவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கீழ்படிதல் இல்லாத எதையும் அழிவின் பார்வையில் பார்ப்பவர்களாக இருப்பர்.
சரி, நமக்கு அதுப்போன்ற அணுகுமுறைகள் பிடிக்காது தான். ஆனால் நீங்கள் சற்று ஆழமாகப் பார்த்தால், ஒரு அடங்காத குழந்தைப் பெரும்பாலும் அமைதியற்ற குணமுடையவர்களேயன்றி வேறொன்றுமில்லை. உங்கள் குழந்தை உங்களிடம் சொல்ல நினைத்த ஏதோ ஒன்றை சொல்லத் தெரியாமல் தவறான வழிகளில் வெளிப்படுத்துகிறது. எனவே இவ்வாறான குழந்தைகளை எவ்வாறு கையாளுவது என்பதை மேற்கொண்டு பார்ப்போம்.
அவர்கள் சொல்வதை கேட்கவும் கவனிக்கவும் முயலுங்கள்
முதலில், கீழ்படியாத குழந்தைகள் விரும்புவது ஒன்றுதான். அவர்கள் சொல்வதை செவிகொடுத்துக் கேட்பது என்பதுதான் அது. அவனோ அல்லது அவளோ சொல்ல நினைக்கும் ஒன்றை நீங்கள் கவனிக்கவும், கேட்கவும் வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் அதனைப் புறக்கணித்தால், அவர்கள் தங்கள் அணுகுமுறையில் மேலும் தீவிரம் காட்டக்கூடும்.
எதிர்க்காதீர்கள்
அதுப்போன்ற குழந்தைகளைப் பார்த்து கூச்சலிடுவதோ அல்லது அடிப்பதோ நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்யும். அவர்கள் தங்கள் பிடிவாதத்தையும், சத்தத்தையும் அதிகப்படுத்தி பிரச்சனைக்களை அதிகரிக்கவே செய்வர்.
பொறுமையாக இருங்கள்
அவர்களிடம் பொறுமையாகப் பேச்சுக் கொடுத்து, அவர்கள் கவனத்தைத் திசை திருப்ப முயலுங்கள். வேண்டுமானால் ஒரு இனிப்பையோ அல்லது சாக்லேட்டையோ கொடுத்து அவர்களை அமைதிப்படுத்துங்கள். ஆனால் அதனை வாடிக்கையாக்கிவிடாதீர்கள்.
அவர்களுக்கு அறிவுரை கூறி ஊக்கப்படுத்துங்கள்
குழந்தை சற்று அமைதியானதும், அவ்வாறு நடந்து கொள்வது தவறான ஒன்று என்பதை விளக்குங்கள். அதுப்போன்ற கெட்ட நடத்தைகளால் விளையும் தீங்குகளை எடுத்துரைத்து, அவை சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது என்பதையும் உணர்த்துங்கள்.