Latest Updates
-
செஃப் அருணா ஸ்டைல் மாங்காய் ரசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கடும் வெயிலில் வீடே கொதிக்குதா? இந்த வாஸ்து செடிகளை வைத்தால் குளிர்ச்சியும் பணவரவும் நிச்சயம்! -
Summer Eye Health: கோடையில் சந்திக்கும் கண் பிரச்சனைகளை தடுப்பது எப்படி? - விளக்கும் டாக்டர்! -
புதிய வீட்டிற்கு குடிபோகும் முன் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்தீர்களா? அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் ரகசியம்! -
12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: ஜூன் மாதம் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
3/4 கப் கோதுமை ரவை இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள தோல்வி துரத்தப்போகுதாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 25 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
June 2026 Horoscope: ஜூன் மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்களால் கோடீஸ்வர யோகத்தை பெறும் 3 ராசிகள் -
குடைமிளகாயை வைச்சு இப்படி வித்தியாசமா குருமா செய்யுங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!!

1. 'அம்மா எனக்கு வயிறு வலிக்குது!/தலை வலிக்குது!/கால் வலிக்குது!/முதுகு வலிக்குது!/பல் வலிக்குது!' என்று சொல்வார்கள். இது ரொம்ப பழைய காரணங்கள் தான். ஆனால் இப்படி சொன்னால் எந்த தாய் தான் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவாள். இதைத் தெரிந்து கொண்டு தான் குழந்தைகள் அவ்வாறு சொல்கிறார்கள். ஆகவே பெற்றோர்களே ஏமாறாமல், தங்கள் குழந்தைகளது உடல் நிலையை தினமும் கவனமாக கவனித்து வாருங்கள். அப்படி செய்தால் அவர்கள் என்ன காரணம் சொன்னாலும், நீங்கள் பயப்படாமல் அவர்களை பள்ளிக்கு அனுப்பலாம்.
2. 'எனக்கு டீச்சரைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. அவர் என்னை எப்போதும் திட்டுகிறார்' என்று சொல்வது. இதையும் அடிக்கடி அவர்கள் சொல்வார்கள். அப்படி அவர்கள் சொன்னால் அதை அலட்சியமாக நினைக்காமல், உடனே விசாரித்து விடுங்கள். ஏனென்றால் சிலசமயம் அப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கலாம். ஆகவே விசாரிப்பது நல்லது.
3. 'எனக்கு எந்த நண்பர்களும் அந்த ஸ்கூலில் இல்லை' என்று புதுவிதமாக சொல்வது. இது நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று சொல்வதற்கு ஒரு புதிய காரணமாக இருக்கிறதா? ஆம், அவர்களால் என்ன காரணங்கள் சொல்ல முடியுமோ அதைத் தானே அவர்கள் சொல்ல முடியும்.
4. 'எனக்கு தூக்கமா வருகிறது. கண் விழிக்க முடியவில்லை, எனக்கு கண் எரிகிறது' என்றெல்லாம் சொல்வார்கள். பெற்றோர்கள் இரவில் குழந்தைகளை சரியான நேரத்தில் தூங்க வைக்க வேண்டும். அவர்கள் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வைக்க வேண்டும். அப்படி அவர்கள் தூங்கினால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. இதை வைத்து நீங்கள் அவர்களது உடல் நிலையை தெரிந்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications