Latest Updates
-
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடீஸ்வர யோகத்தைப் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விவாகரத்து விகிதம் குறைவு என்பது பெருமையா? குடும்ப கௌரவத்திற்காகத் தம்பதிகள் அனுபவிக்கும் மௌனமான சித்திரவதை இதுதானா? -
திருமண உறவில் வரதட்சணை கொடுமை! உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு உங்கள் பாதுகாப்பிற்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? -
சாணக்கிய நீதி படி பெண்கள் அவர்களின் கணவரிடம் எப்போதும் மறைக்கும் 5 ரகசியங்கள் என்னென்ன தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, ஹோட்டலில் சாப்பிடுவதை விட செமையா இருக்கும் -
வெயில் கொளுத்துதா? இந்த வாஸ்து செடிகளை வீட்ல வைங்க… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தானா வரும்! -
June 2026 Horoscope: ஜூன் மாதத்தில் பெரும் நஷ்டத்தையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
வெயில் கொளுத்துதா? வீட்டை ஜில்லென்று மாற்ற இந்த 5 வாஸ்து ரகசியங்களை ட்ரை பண்ணுங்க! -
பாபா வாங்கா கணிப்பு படி 2028-ல் உலகம் சந்திக்கப்போகும் மிகப்பெரிய அழிவு என்ன தெரியுமா? -
அரிசி மாவு சப்பாத்தியும், தக்காளி தொக்கும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
குழந்தைங்க கடிக்குறாங்களா? உடனே அதை நிறுத்துங்க...
குழந்தைகள் வளரும் போது நிறைய கெட்டப் பழக்கங்களை பழகுவார்கள். ஆனால் அவற்றை எங்கும் பழகுவதில்லை. அனைத்தும் அவர்களைச் சுற்றி நடப்பதைப் பார்த்து தான் பழகுகிறார்கள். அதில் முக்கியமான ஒரு கெட்டப் பழக்கம் தான் கடிப்பது. குழந்தைகளின் கண்களுக்கு ஏதேனும் தென்பட்டால் போதும், அவர்கள் அதை உடனே வாயில் தான் வைப்பார்கள். இவ்வாறு அவர்கள் கடிக்கும் போது, அதை கண்டிக்காமல் சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. ஏனெனில் அவ்வாறு விட்டால், பின் அவற்றை அவர்களிடம் இருந்து விட வைப்பது என்பது கடினமாகிவிடும். ஆகவே அவற்றை எப்படியெல்லாம் நிறுத்த வேண்டும் என்று குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* குழந்தைகள் இருக்கும் போது எப்போதுமே பெற்றோர்கள் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் தேவையில்லாமல் எதையாவது கடிப்பது போல் இருந்தால், அப்போது அவர்களிடம் இப்படி செய்யக் கூடாது என்று உடனே சொல்ல வேண்டும். அதைவிட்டு, பொறுமையாக சொல்லலாம் என்று விட்டுவிட்டால், பின் அவர்கள் மனதில் பெற்றோர் ஒன்றும் சொல்லமாட்டார்கள் என்று தோன்றிவிடும். சிறுவயதிலேயே அது தவறு என்று சொன்னால், குழந்தைகள் மனதில் அது நன்கு பதிந்துவிடும்.
* குழந்தைகளிடம் எப்போதுமே அதட்டி பேசாமல் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால் எப்போதும் குழந்தைகளிடம் சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் சந்தோஷமாகவும், கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபமும் பட வேண்டும். அப்படியிருந்தால் தான் அவர்கள் எதை சொன்னாலும் புரிந்து கொள்வார்கள்.
* குழந்தைகள் ஏதேனும் கோபம் வந்தால், அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அல்லது பிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதற்காக கடிப்பார்கள். ஆகவே அவர்களுக்கு கோபம் வரும் வகையில் எதையும் செய்ய வேண்டாம். ஏனெனில் குழந்தைகள் தேவையில்லாமல் கடிக்க மாட்டார்கள். அவர்களை எரிச்சல் ஏற்படுத்தினால் தான் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். ஆகவே அவ்வாறு நடப்பதை பெற்றோர்கள் தான் நிறுத்த வேண்டும்.
* குழந்தைகளுக்கு கோபம் வந்தால், அவற்றை வெளிப்படுத்த வேறு முறையை சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும் எதையும் அவர்கள் புரியும் வகையில் செய்தால், அவர்கள் அவ்வாறு செய்வதை நிறுத்திவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல், கடிப்பதால் என்ன நடக்கும் என்றும் தெளிவாக சொல்ல வேண்டும்.
எனவே, மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் கொண்டு குழந்தைகளிடம் நடந்து கொள்ளுங்கள். இதனால் அவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள், மீண்டும் அந்த தவறை செய்யாமாட்டார்கள் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications